திருச்சி ராஜா காலனி அருகே சுற்றுச்சுவர் இடிந்து கட்டடத் தொழிலாளி சாவு

திருச்சி ராஜா காலனி அருகே ஞாயிற்றுக்கிழமை கட்டுமானப் பணியின்போது, வீட்டின் பழைய சுற்றுச்சுவர் இடிந்து விழுந்ததில் கட்டடத் தொழிலாளி உயிரிழந்தார்.
Updated on
1 min read

திருச்சி ராஜா காலனி அருகே ஞாயிற்றுக்கிழமை கட்டுமானப் பணியின்போது, வீட்டின் பழைய சுற்றுச்சுவர் இடிந்து விழுந்ததில் கட்டடத் தொழிலாளி உயிரிழந்தார்.

நியூ ராஜா காலனி, விவேகானந்தாபுரத்தைச் சேர்ந்தவர் ஆனந்த். இவர் அப்பகுதியில் 16 வீடுகள் கொண்ட அடுக்குமாடி குடியிருப்பு கட்டியுள்ளார். ஞாயிற்றுக்கிழமை இந்த குடியிருப்பை சுற்றித் தடுப்புச் சுவர் அமைக்கும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது, ஏற்கெனவே இருந்த தடுப்புச் சுவர் திடீரென இடிந்து விழுந்தது.

இதில் அஸ்திவாரம் தோண்டிக்கொண்டிருந்த மண்ணச்சநல்லூர் அருகேயுள்ள பாலையூரைச் சேர்ந்த ஸ்ரீரங்கன் (45) என்பவர் இடிபாடுகளுக்குள் சிக்கினார்.

சக தொழிலாளர்கள் அவரை மீட்டு திருச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலே ஸ்ரீரங்கன் உயிரிழந்தார். இதுகுறித்து மாவட்ட அமர்வு நீதிமன்ற போலீஸôர் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com