மதச்சார்பற்ற கொள்கையில் சமரசமில்லை, தவெக தலைமையில் ஆட்சி! - விஜய்தேர்தலுக்கிடையே, அசாமில் காங்கிரஸ் எம்.பி. ராஜிநாமா! பாஜகவில் இணைந்தார்!தமிழகத்தில் கோடை வெப்பம் குறைய வாய்ப்பு.. அடுத்த ஒரு வாரத்திற்கு மழை!தில்லி குடியிருப்புக் கட்டடத்தில் தீ: 3 குழந்தைகள் உள்பட 9 பேர் பலிதுரந்தர் - 2 சிறப்பு திரையிடல்: ஹிந்தி தவிர பிறமொழிக் காட்சிகள் ரத்து!பியூஷ் கோயல் நாளை சென்னை வருகை! அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீடு இறுதியாகிறதா?தொடா்ந்து சரியும் தங்கம் விலை: இன்று எவ்வளவு குறைந்தது?இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 கட்சிகள் ஒதுக்கீடு!
/

பண்ருட்டியில் குடியிருப்பு பகுதியில் அனுமதியின்றி பதுக்கிவைக்கப்பட்டிருந்த வெடி மருந்துகள் பறிமுதல்

பண்ருட்டியில் குடியிருப்பு பகுதியில் அனுமதியின்றி பதுக்கிவைக்கப்பட்டிருந்த சுமார் ஒன்றரை லட்சம் மதிப்புள்ள நாட்டு வெடிகள் மற்றும் வெடி மருந்துகளை போலீஸார் கைப்பற்றினர்.

News image
Updated On :26 ஜூன் 2015, 12:39 pm

சீனிவாசன்

பண்ருட்டியில் குடியிருப்பு பகுதியில் அனுமதியின்றி பதுக்கிவைக்கப்பட்டிருந்த சுமார் ஒன்றரை லட்சம் மதிப்புள்ள நாட்டு வெடிகள் மற்றும் வெடி மருந்துகளை போலீஸார் கைப்பற்றினர்.

பண்ருட்டியை அடுத்த திருவதிகையில் அனுமதி பெற்ற  நாட்டு வெடிகள் மற்றும் மருந்துகள் தயாரிப்பு நிறுவனம் இயங்கி வருகிறது. இந்நிறுவனத்தை சேர்ந்த சிலர் குடியிருப்புகளுக்கு மத்தியில் உள்ள ஒரு வீட்டில் சக்தி வாய்ந்த நாட்டு வெடிகள், மற்றும் வெடி மருந்துகளை பதுக்கி வைத்திருப்பதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து கடலூர் மற்றும் விழுப்புரம் மாவட்ட திட்டமிட்ட குற்றங்கள், மற்றும் ரவுடிகள் கண்காணிப்பு பிரிவு ஆய்வாளர் ஜெரால்டு, தலைமையிலான காவலர்கள் பன்னீர் செல்வம் ராஜகோபால் ரமேஷ் ஆகியோர் சக்ரபாணி நகரில் வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த வெடி மருந்துகளை ஆய்வு செய்து அவற்றை கைப்பற்றினர். பண்ருட்டி ஆய்வாளர் முருகேசன் உடன் இருந்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.