மக்கள்தொகை கணக்கெடுப்பின் முதல் கட்டம் நாளை தொடக்கம்!மேற்குத் தொடா்ச்சி மலை மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு!இந்தியாவுக்கு வரவேண்டிய கப்பல்கள் ஹோா்முஸ் நீரிணையில் சிக்கித் தவிப்பு!21 மாநிலங்கள் - யூனியன் பிரதேசங்களுக்கு மீண்டும் மண்ணெண்ணெய் ஒதுக்கீடுஈரான் பொதுக் கட்டமைப்பை நிா்மூலமாக்குவோம்: டிரம்ப் மிரட்டல்
/

விராலிமலையில் மோட்டார் சைக்கிள் மரத்தில் மோதல்: இளைஞர் இருவர் சாவு

விராலிமலை அருகே சனிக்கிழமை மோட்டார் சைக்கிள் மரத்தின் மீது மோதியதில் இளைஞர் இருவர் உயிரிழந்தனர்.

News image
Updated On :27 ஜூன் 2015, 4:11 am

சி. உதயகுமார்

விராலிமலை அருகே சனிக்கிழமை மோட்டார் சைக்கிள் மரத்தின் மீது மோதியதில் இளைஞர் இருவர் உயிரிழந்தனர்.

விராலிமலை அருகே உள்ள கொடும்பாளூர் கலிங்கிகாடுவைச் சேர்ந்த அழகர் மகன் ஏழுமலை(23), வேலு மகன் குணசேகர்(18) மற்றும் பட்டுக்கோட்டை பள்ளத்தூரைச் சேர்ந்த சீனிவாசன் மகன் தங்கராசு(23) இவர்கள் மூவரும் கட்டடத்தொழிலாளிகள்.

இந்நிலையில்  இவர்கள் மூவரும் சனிக்கிழமை இரவு மோட்டார் சைக்கிளிள் சென்றுகொண்டிருந்தனர். கொடும்பாளூர்  புதுக்கோட்டை சாலை பிடாரியம்மன் கோயில் அருகே சென்றபோது, நிலைதடுமாறிய மோட்டார் சைக்கிள் சாலையோர மரத்தின் மீது மோதியது.

இதில் பலத்த காயமடைந்த தங்கராசு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மருத்துவமனை கொண்டும் செல்லும் வழியில் ஏழுமலை உயிரிழந்தார். பலத்த காயங்களுடன் குணசேகர் மணப்பாறை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகிறார். இதுகுறித்து விரலிமலை காவல் ஆய்வாளர் அ.மா. செந்தில்மாறன் வழக்கு பதிந்து விசாரிக்கிறார்..

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.