டி20 உலக கோப்பையில் இங்கிலாந்து த்ரில் வெற்றி..! கேஜரிவால் விடுதலையை எதிர்த்து தில்லி உயர்நீதிமன்றத்தில் சிபிஐ மேல்முறையீடு!தமிழக வரலாற்றில் ஒரு கூட்டணி நீண்ட காலமாக வெற்றிகரமாகத் தொடருவது இதுவே முதல்முறை - முதல்வர் ஸ்டாலின் சென்னை மெட்ரோ ரயில் பணி: கலங்கரை விளக்கம் முதல் திருமயிலை வரை சுரங்கம் தோண்டும் பணி நிறைவுஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ள 12 பேரின் ஜாமீன் ரத்து மலையாள நடிகர் திலீப் விடுதலையை எதிர்த்து கேரள அரசு உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு!அதிமுகவில் மீண்டும் இணைந்தார் வெல்லமண்டி நடராஜன்இஸ்ரேலில் இருந்து வெளியேற அமெரிக்க குடிமக்களுக்கு அறிவுறுத்தல்!கோவையில் மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு: மார்ச் 7-இல் தீர்ப்பு!தேவைப்பட்டால் நடிகையின் பெயரையும் வழக்கில் சேர்ப்பேன்: விஜய்யின் மனைவி சங்கீதாபிரதமர் மோடி நாளை தமிழகம் வருகிறார்! மார்ச் 1-ல் புதுச்சேரி பயணம்!நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல்ஆப்கானிஸ்தானுடன் போர் - பாகிஸ்தான்பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!
/

பாஜகவைக் கண்டித்து ராமதாஸ் ஆர்ப்பாட்டம்

நிலம் கையகப்படுத்துதல் சட்டத் திருத்த மசோதாவை மத்திய அரசு திரும்பப் பெற வலியுறுத்தி, பாமக நிறுவனர் ராமதாஸ் செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார்.

News image
Updated On :9 ஜனவரி 2024, 4:51 am

அரவிந்தன்

நிலம் கையகப்படுத்துதல் சட்டத் திருத்த மசோதாவை மத்திய அரசு திரும்பப் பெற வலியுறுத்தி, பாமக நிறுவனர் ராமதாஸ் செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார்.

பாமக சார்பில் வள்ளுவர் கோட்டம் அருகில் செவ்வாய்க்கிழமை கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்தை ராமதாஸ் தொடங்கி வைத்து பேசியது:-

பாஜக அரசு கொண்டு வந்துள்ள நிலம் கையகப்படுத்துதல் சட்ட திருத்த மசோதாவை கடுமையாக எதிர்க்கிறோம். இது தேவை இல்லாத சட்டத் திருத்தம். இதற்காக அவசர சட்டம் கொண்டு வந்து நிறைவேற்ற முயற்சிப்பது கண்டிக்கத்தக்கது.

நாடெங்கும் இதற்கு எதிர்ப்பு எழும்பியுள்ளது. இந்த சட்டத்தைக் கொண்டு வந்தால் கிராம மக்கள் குறிப்பாக விவசாயிகள் மிகவும் பாதிக்கப்படுவர். இந்த மசோதாவைத் திரும்பப் பெற வேண்டும்.

நல்ல அம்சங்களுடன் திருத்தங்கள் கொண்டு வந்தால் ஓரளவு திருப்தி அடைவோம் என்றார் ராமதாஸ்.

பின்னர், ராமதாஸிடம், பாஜக கூட்டணியில் நீடிக்கிறீர்களா என்று செய்தியாளர் ஒருவர் கேள்வி எழுப்பினார்.

அதற்கு பதில் அளித்த ராமதாஸ், மத்தியில் தேசிய ஜனநாயக கூட்டணியில்தான் நீடிக்கிறோம். மாநிலத்தில் நாங்கள் முதல்வர் வேட்பாளரை அறிவித்து இருக்கிறோம். எங்கள் தலைமையில்தான் கூட்டணி அமையும் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.