மதுகுடிக்க மனைவி பணம் தராததால் தறித் தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை

கரூர் மாவட்டம் வெள்ளியனை அருகே உள்ள கத்தாளப்பட்டி மருதம்பட்டி காலனியைச் சேர்ந்தவர் ஆனந்தன்(39). தறித்தொழிலாளி. குடிப்பழக்கம் கொண்ட இவர் புதன்கிழமை தனது மனைவியிடம் மது
Updated on
1 min read

மதுகுடிக்க மனைவி பணம் தராததால் விரக்தியடைந்த தறித்தொழிலாளி வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.

கரூர் மாவட்டம் வெள்ளியனை அருகே உள்ள கத்தாளப்பட்டி மருதம்பட்டி காலனியைச் சேர்ந்தவர் ஆனந்தன்(39). தறித்தொழிலாளி. குடிப்பழக்கம் கொண்ட இவர் புதன்கிழமை தனது மனைவியிடம் மது குடிக்க பணம் தருமாறு கேட்டுள்ளார். இதற்கு அவர் மறுத்ததாக தெரிகிறது. இதில் விரக்தியடைந்த ஆனந்தன் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.

இதுகுறித்து வெள்ளியனை போலீஸார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com