எண்ணெய்க் கப்பல்களுக்குப் பாதுகாப்பு அளிக்க நாங்கள் தயார்நிலையில் இல்லை! - அமெரிக்கா!அமெரிக்கா மீதான தாக்குதல் தொடரும்! மொஜ்தபா கமேனி முதல் உரையில் எச்சரிக்கை!ஈரான் போர்: சொந்த நாட்டினுள் இடம்பெயர்ந்த 32 லட்சம் மக்கள்!பங்குச்சந்தை: ஆட்டோ பங்குகள் கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 829, நிஃப்டி 228 புள்ளிகள் சரிவு!ஓபிசி பிரிவினருக்கான கிரீமி லேயர் தகுதி: உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முதல்வர் ஸ்டாலின் ஆதரவு!சட்டம்-ஒழுங்கு சீர்கேடு: திமுக அரசைக் கண்டித்து தே.ஜ.கூ. ஆர்ப்பாட்டம்!தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!
/

மனைவியைக் குத்திக் கொன்ற கணவருக்கு ஆயுள்சிறை: நெல்லை நீதிமன்றம் தீர்ப்பு

பாளையங்கோட்டையில் பெண் குத்திக் கொலை செய்யப்பட்ட வழக்கில் அவரது கணவருக்கு ஆயுள்தண்டனை

News image
Updated On :6 மார்ச் 2015, 9:23 am

முத்துக்குமார்

பாளையங்கோட்டையில் பெண் குத்திக் கொலை செய்யப்பட்ட வழக்கில் அவரது கணவருக்கு ஆயுள்தண்டனை விதித்து திருநெல்வேலி நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தீர்ப்பளித்தது.

பாளையங்கோட்டை கே.டி.சி. நகரில் உள்ள சுபம் காலனியைச் சேர்ந்த நல்லபெருமாள் மகன் ரவி (46). இவரது மனைவி லதா (42). கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்த நிலையில் கடந்த 8-8-2013 அன்று ஏற்பட்ட தகராறில் ரவி கத்தியால் லதாவை குத்திக் கொலை செய்தார். பின்னர் அதனை மறைக்க உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீவைத்துவிட்டு மனைவி தற்கொலை செய்ததாக கூறினார்.

பாளையங்கோட்டை தாலுகா போலீஸார் வழக்குப்பதிந்து நடத்திய விசாரணையில் ரவி கொலை செய்தது தெரியவந்தது. இதையடுத்து அவரை கைது செய்தனர். இந்த வழக்கு திருநெல்வேலி மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி எம்.நசீர்அகமது, குற்றஞ்சாட்டப்பட்ட ரவிக்கு ஆயுள்தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்து வெள்ளிக்கிழமை தீர்ப்பளித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.