புதுச்சேரியில் இளைஞர்கள் மதுவினால் சீரழிகிறார்கள். இம்மாநிலத்தில் மதுவை முழுமையாக தடை செய்யவேண்டும். புதுச்சேரியில் வக்பு வாரியத்தை, அமைக்கவுள்ள சிறுபான்மையினர் மற்றும் பிற்படுத்தப்பட்டோர் நலத் துறையுடன் சேர்க்கவேண்டும். வக்பு வாரிய சொத்துகள் சிலரால் ஆக்கிரமிக்கப்படுவதாக புகார் எழுகிறது. முத்தவல்லிகள், ஜமாஅத்தார்கள், த.மு.மு.க உள்ளிட்ட அமைப்பினர் கொண்ட புதிய குழுவை புதுச்சேரி அரசு அமைத்து, சொத்துகளை காக்கவேண்டும். புதுவையில் 7 சதவீதத்துக்கு மேல் முஸ்லிம்கள் உள்ளதால், இவர்களுக்கு கல்வி, வேலைவாய்ப்பில் வழங்கப்பட்டுள்ள 2 சதத்தை உயர்த்தி வழங்கவேண்டும்.