நெல்லை அருகே கார் மோதி கல்லூரி மாணவர் சாவு
திருநெல்வேலி அருகே வெள்ளிக்கிழமை பேருந்தை முந்தி சென்றபோது, கார் மோதியதில் மோட்டார் சைக்கிளில் சென்ற....


திருநெல்வேலி அருகே வெள்ளிக்கிழமை பேருந்தை முந்தி சென்றபோது, கார் மோதியதில் மோட்டார் சைக்கிளில் சென்ற கல்லூரி மாணவர் இறந்தார். மற்றொரு மாணவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது.
வீரவநல்லூர் அருகேயுள்ள அரிகேசநல்லூர் பாறையடிக் காலனியை சேர்ந்தவர் வீரப்பன் மகன் முத்து(20). பத்தமடையை சேர்ந்தவர் நாகூர் மகன் ஆதம்மரைக்காயர் (20). இருவரும் தாழையூத்தில் உள்ள தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் சிவில் பிரிவில் மூன்றாம் ஆண்டு பயின்று வருகின்றனர்.
நண்பர்களான இருவரும் வெள்ளிக்கிழமை கல்லூரி முடிந்ததும் மோட்டார் சைக்கிளில் ஊருக்கு வந்து கொண்டிருந்தனர். மோட்டார் சைக்கிளை முத்து ஓட்டினாராம்.
மேலச்செவல் அருகே மோட்டார் சைக்கிளில் வந்த மாணவர்கள் அரசு பேருந்தை முந்தி செல்ல முயன்றனர். அப்போது விக்கிரமசிங்கபுரத்தில் இருந்து திருநெல்வேலி நோக்கி வந்த குவாலிஸ் கார் எதிர்பாராத விதமாக மோட்டார் சைக்கிள் மீது விபத்துக்குள்ளானது. இதில் பலத்த காயடமைடந்த முத்து சம்பவ இடத்திலேயே இறந்தார்.
காவல் ஆய்வாளர் ச. சந்திரசேகரன் மற்றும் போலீஸார், விபத்து நடைபெற்ற இடத்திற்கு சென்று காயமடைந்த மாணவரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். முன்னீர்பள்ளம் போலீசார் வழக்குப் பதி்ந்து விசாரணை நடத்தினர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...