ஆரணி அடுத்த சேத்துப்பட்டு பஸ் நிறுத்தத்தில் பஸ்ஸுக்காக நின்றிருந்த விவசாயிடம் பணம் கொள்ளை அடித்த வாலிபரை சேத்துப்பட்டு போலீஸார் கைது செய்தனர்.
சேத்துப்பட்டு அடுத்த நரசிங்கராயன்பேட்டை கிராமத்தைச் சேர்ந்த விவசாயி வெங்கடேசன்(49) என்பவர் சேத்துப்பட்டு மார்க்கெட் கமிட்டிக்கு சென்று நெல்லை விற்பனை செய்துவிட்டு அவரது கிராமத்திற்கு செல்ல செவ்வாய்கிழமை இரவு சேத்துப்பட்டு பஸ் நிறுத்தத்தில் பஸ்ஸுக்காக காத்திருந்தார்.
அப்போது விவசாயி வெங்கடேசனிடம் இருந்த பணத்தை ஒருவன் கொள்ளை அடித்துக்கொண்டு ஓடினான். இதனால் அதிர்ச்சி அடைந்த வெங்கடேசன் சேத்துப்பட்டு போலீஸில் புகார் கொடுத்தார். போலீஸார் வழக்குபதிவு செய்து சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை செய்ததில் சேத்துப்பட்டு லூர்துநகர் சேர்ந்த மைக்கேல் மகன் பிலிப்(26) என்பவர் கொள்ளை அடித்தது தெரியவந்தது. இதனால் போலீஸார் தேடுதல் வேட்டை நடத்தினர். அப்போது பஜாரில் சுற்றித்திரிந்துகொண்டிருந்த பிலிப்பை மடக்கி பிடித்து கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்த பணம் ரூ.4 ஆயிரத்தினை கைப்பற்றி விசாரணை செய்து வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
ராமதாஸ் பாமகவின் 30 வேட்பாளர்களுக்கு சிலிண்டர் சின்னம்!

இம்பாக்ட் வீரர் விதி இளம் வீரர்களுக்கான பொன்னான வாய்ப்பு: பிரப்சிம்ரன் சிங்

களைகட்டிய புதுச்சேரி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு!

எரிவாயு இறக்குமதி? கத்தார் சென்றார் மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சர்!
வீடியோக்கள்

புதுச்சேரி & கேரளத்தில் வாக்குப்பதிவு நிறைவு! வாக்குப்பதிவில் நடந்த சுவாரசியங்கள்!
தினமணி செய்திச் சேவை

Podcast | மனம் மாறுவாரா ராகுல் காந்தி? | News & Views | E-25 |
தினமணி செய்திச் சேவை

நான் எந்த ஆயுதத்தை எடுக்க வேண்டும் என்பதை முடிவு செய்வது எதிரிகள்தான்!
இணையதளச் செய்திப் பிரிவு

நீ சாரல் பாடல் வெளியானது!
இணையதளச் செய்திப் பிரிவு

