திருவண்ணாமலை அருகே பைக் மோதி தொழிலாளி சாவு
திருவண்ணாமலை அருகே சாலையைக் கடக்க முயன்ற கூலித் தொழிலாளி, பைக் மோதி இறந்தார்.


திருவண்ணாமலை அருகே சாலையைக் கடக்க முயன்ற கூலித் தொழிலாளி, பைக் மோதி இறந்தார்.
திருவண்ணாமலையை அடுத்த புதுமல்லவாடி கிராமத்தைச் சேர்ந்தவர் கூலித் தொழிலாளி அச்சுதன் (65). இவர், செவ்வாய்க்கிழமை (மே 5) இரவு மல்லவாடி பேருந்து நிறுத்தத்தில் சாலையைக் கடக்க முயன்றார். அப்போது, திருவண்ணாமலையில் இருந்து வந்த பைக் அச்சுதன் மீது மோதியது.
படுகாயமடைந்த அவரைப் பொதுமக்கள் மீட்டு திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர் சிகிச்சைப் பலனின்றி இறந்தார்.
பைக் ஓட்டி வந்த திருவண்ணாமலையை அடுத்த அருணகிரிமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த கட்டட மேஸ்திரி செல்வம் (40) படுகாயம் அடைந்தார். இவர், திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகிறார். இதுகுறித்து, திருவண்ணாமலை தாலுகா போலீஸôர் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...