ராமதாஸ் பாமகவின் 30 வேட்பாளர்களுக்கு சிலிண்டர் சின்னம்!முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் சி.டி. கோபிநாத் 96 வயதில் காலமானார்!புதுவையில் வரலாறு காணாத வாக்குப் பதிவு!ஏப்ரல் 17 முதல் கோடை விடுமுறை!பங்குச்சந்தை வீழ்ச்சி! 900 புள்ளிகள் சரிந்த சென்செக்ஸ்!!திட்டங்கள் இருக்கும் வரை ஸ்டாலின்தான் தமிழ்நாட்டை ஆள்வான்! - முதல்வர் ஸ்டாலின்புதுவையில் வரலாறு காணாத வாக்குப் பதிவு!தமிழ்நாட்டின் வளர்ச்சியை திமுக விரும்பவில்லை: பியூஷ் கோயல்!வேட்பாளரைத் திரும்பப் பெற்ற காங்கிரஸ்! சுநேத்ரா பவார் வெற்றி உறுதி?
/

திருச்சி மத்திய சிறையில் ஆயுள் தண்டனை கைதி சாவு

தஞ்சை மாவட்டம், சித்திரைக்காடு பகுதியைச் சேர்ந்தவர் ஸ்ரீதர் (41). கடந்த 1993-ம் ஆண்டு நிகழ்ந்த ஒரு கொலை வழக்கு தொடர்பாக ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு, திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.

Updated On :9 மே 2015, 3:18 pm

தஞ்சை மாவட்டம், சித்திரைக்காடு பகுதியைச் சேர்ந்தவர் ஸ்ரீதர் (41). கடந்த 1993-ம் ஆண்டு நிகழ்ந்த ஒரு கொலை வழக்கு தொடர்பாக ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு, திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.

இந்நிலையில், வெள்ளிக்கிழமை இரவு சிறை வளாகத்தில் தொலைக்காட்சி பார்த்துக் கொண்டிருந்த ஸ்ரீதருக்கு நெஞ்சு வலி ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து சிறை அதிகாரிகள் அவரை திருச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கெனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து கே.கே. நகர் போலீஸôர் விசாரிக்கின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.