தேர்தலுக்கிடையே, அசாமில் காங்கிரஸ் எம்.பி. ராஜிநாமா! பாஜகவில் இணைந்தார்!தமிழகத்தில் கோடை வெப்பம் குறைய வாய்ப்பு.. அடுத்த ஒரு வாரத்திற்கு மழை!தில்லி குடியிருப்புக் கட்டடத்தில் தீ: 3 குழந்தைகள் உள்பட 9 பேர் பலிதுரந்தர் - 2 சிறப்பு திரையிடல்: ஹிந்தி தவிர பிறமொழிக் காட்சிகள் ரத்து!பியூஷ் கோயல் நாளை சென்னை வருகை! அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீடு இறுதியாகிறதா?தொடா்ந்து சரியும் தங்கம் விலை: இன்று எவ்வளவு குறைந்தது?இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 கட்சிகள் ஒதுக்கீடு!
/

நெய்வேலி அருகே பெண் மர்ம சாவு: போலீஸார் விசாரணை

நெய்வேலி வட்டம் 3 இல் வசிக்கும், மும்தாஜ் என்பவரது வீட்டில் இருந்து இன்று காலை 11 மணியளவில் புகை வெளினாதை அடுத்து அக்கம் பக்கத்தினர் தீயணைப்புத் துறையினருக்கு புகார் கொடுத்தனர்.

News image
Updated On :23 மே 2015, 11:02 am

சீனிவாசன்

நெய்வேலி வட்டம் 3 இல் வசிக்கும், மும்தாஜ் என்பவரது வீட்டில் இருந்து இன்று காலை 11 மணியளவில் புகை வெளினாதை அடுத்து அக்கம் பக்கத்தினர் தீயணைப்புத் துறையினருக்கு புகார் கொடுத்தனர்.

இதையடுத்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் உள்ளே சென்று பார்த்த போது மும்தாஜ் இறந்து கிடந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த போலீஸார் சம்வ இடத்துக்கு வந்து விசாரணை மோற்கொண்டுள்ளனர்.

இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறும் போது மர்ம நபர் யாரோ ஒருவர் வந்து சென்றுள்ளார். அநேகமாக நகைகளை கொள்ளையடிக்க வந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. மும்தாஜின் கணவர் நெய்வேலி அனல் மின்நிலையம் 2இல் டெக்னீசியனாக பணியாற்றி வருகிறார். இவருக்கு 2 மகன்கள் முகமது ரசீப், முகமது ரசீத், ஆகிய இருவரும் சென்னையில் ஒரு தனியார் கம்பெனியில் பணியாற்றி வருகின்றனர்.

மேலும் இச்சம்பவம் குறித்து ஏ.டி.எஸ்.பி. செந்தில், இன்ஸ்பெக்டர் ராஜா, விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.