தமிழகம் முழுவதும் 25 இடங்களில் கட்சியினரிடையே தகராறுதமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைமேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் 92% வாக்குப் பதிவு: பல இடங்களில் வன்முறை! வேட்பாளா்கள் மீது தாக்குதல்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்இலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுசிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்ஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுஇஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி
/

ஆம்பூர் அருகே குடிநீர் கேட்டு சாலை மறியல்: அரசு பேருந்தை சிறைபிடித்த பொதுமக்கள்

ஆம்பூர் அருகே குடிநீர் கேட்டு பொதுமக்கள் ஞாயிற்றுக்கிழமை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.  மேலும் அவ்வழியாக வந்த அரசு பஸ்ûஸயும் சிறைபிடித்தனர்.

Updated On :24 மே 2015, 10:31 am

ஆம்பூர் அருகே குடிநீர் கேட்டு பொதுமக்கள் ஞாயிற்றுக்கிழமை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.  மேலும் அவ்வழியாக வந்த அரசு பஸ்ûஸயும் சிறைபிடித்தனர்.

ஆம்பூர் அருகே விண்ணமங்கலம் ஊராட்சிக்குட்பட்ட வெள்ளக்கல் பகுதியில் கடுமையான குடிநீர் தட்டுப்பாடு நிலவி வருகிறது.  இதனால் குடிநீர் கிடைக்காமல் பொதுமக்கள் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர். 

குடிநீர் பிரச்னையை தீர்க்ககோரி பொதுமக்கள் பலமுறை ஊராட்சி மன்றத்திடம் புகார் தெரிவித்தும் இதுவரை எந்த நடவடிக்கை எடுக்கப்படவில்லையாம்.   அதனால் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் காலி குடங்களுடன் சாலை மறியல்  போராட்டத்தில் ஈடுபட்டனர்.  மேலும் அவ்வழியாக வந்த அரசு டவுன் பஸ்சை சிறைபிடித்தனர்.  இதுகுறித்து தகவல் அறிந்ததும் வட்டாட்சியர் ரத்னா, கிராம நிர்வாக அலுவலர் தீனதயாளன்,  ஆம்பூர் கிராமியா காவல் நிலைய போலீஸார் அங்கு சென்று பொதுமக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.  குடிநீர் வழங்க உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததை தொடர்ந்து பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.