நோய் தாக்கம் அதிகமாக இருப்பது குறித்தும், மருத்துவர்கள் யாரும் கிராமத்தில் வந்து நோய் தடுப்பு நடவடிக்கைகளை எடுக்கவில்லை என்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் வே.ராஜாராமனின் கவனத்திற்கு ஞாயிற்றுக்கிழமை தெரியவந்தது.இதனையடுத்து அவர், சிவகாசி சுகாதாரத் துணை இயக்குநர் டாக்டர் கலு சிவலிங்கத்திடம் உடனடியாக தொடர்பு கொண்டு நோய் தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ள கேட்டுக் கொண்டார். அவர் அங்கிருந்து சுகாதார ஆய்வாளர் சந்திரசேகரனிடம் இது குறித்து கேட்டபோது, யாரும் பாதிக்கப்படவில்லை என்று தகவல் கொடுத்துள்ளார். இருந்தபோதிலும், துணை இயக்குநர் நேரடியாக குறிப்பிட்ட கிராமத்திற்கு வந்து நேரடியாக ஆய்வு செய்தார்.