யூடியூபிலும் பிரதமா் மோடி புதிய சாதனை! 3 கோடி போ் பின்தொடரும் ஒரே அரசியல் தலைவா்பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு: தோ்வுக்கூட அனுமதிச் சீட்டு இன்று வெளியீடுஇந்தியாவிடம் போதிய அளவு கச்சா எண்ணெய் கையிருப்பு: மத்திய அமைச்சா் ஹா்தீப் சிங் புரிஇன்று முதல் அரையிறுதி ஆட்டம் - தென்னாப்பிரிக்காவுடன் மோதும் நியூஸிலாந்துமேற்காசியாவிலிருந்து இந்தியா்களை மீட்க இன்று 58 விமானங்கள் இயக்கம்: மத்திய அரசு நாளை வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சோதனை ஓட்டம்
/

பள்ளிக்குச் சென்று கொண்டிருந்த சிறுமியை தாக்கி பாலியல் தொல்லை: இளைஞர் கைது

விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே பள்ளிக்கு சைக்கிளில் சென்று கொண்டிருந்த சிறுமியை இன்று கீழே தள்ளிவிட்டு தாக்கி,

News image
Updated On :3 நவம்பர் 2015, 4:58 pm

கோ.ஜெயக்குமார்

விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே பள்ளிக்கு சைக்கிளில் சென்று கொண்டிருந்த சிறுமியை இன்று கீழே தள்ளிவிட்டு தாக்கி, பாலியல் தொல்லை கொடுத்த இளைஞரை போலீஸார் கைது செய்தனர்.

ஸ்ரீவில்லிபுத்தூர்-சிவகாசி சாலையில் உள்ள கோப்பையநாயக்கன்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் மங்கையர்கரசு. இவரது 11 வயது மகள், பாப்பையாநாயக்கன்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் 6-ம் வகுப்பு படித்து வருகிறார். சைக்கிளில் பள்ளிக்குச் சென்று கொண்டிருந்தபோது, சிவகாசி, தேவர்குளம் ரோடு, குருகாலனியைச் சேர்ந்த மாசாணமுத்து (எ) மணிகண்டன் (19) என்பவர் வழிமறித்து, சைக்கிளில் இருந்து சிறுமியை கீழே தள்ளிவிட்டு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.

இது குறித்து சிறுமி மல்லி காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் போலீஸார் வழக்குப் பதிவு செய்து மாசாணமுத்து (எ) மணிகண்டனைக் கைது செய்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.