விருதுநகர் மாவட்டம், கிருஷ்ணன்கோவில், கலசலிங்கம் பல்கலைக்கழகத்தின் மாணவி பாரிஸ் பல்கலைக்கழகத்திற்கு சென்று ஒரு பருவம் படித்து முடித்து வெற்றி பெற்று திரும்பியுள்ளார். இவருக்கு அதற்கான சான்றிதழை செவ்வாய்கிழமை வேந்தர் க.ஸ்ரீதரன் வழங்கினார்.
கிருஷ்ணன்கோவில், கலசலிங்கம் பல்கலைக்கழகம் பல வெளிநாட்டு பல்கலைக்கழகங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது. இதன்படி இந்த மாணவர்கள் ஒரு பருவம் இங்கிலாந்து, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளுக்குச் சென்று படித்து வருகிறார்கள். இதற்கான பயணக் கட்டணம் உள்ளிட்டவற்றை பல்கலைக்கழகம் செலுத்துகிறது.
2015-ல் இறுதியாண்டு பி.டெக். பயோ டெக்னாலஜி படிக்கும் மாணவி ரோகிதா, பிரான்ஸ் நாட்டில் உள்ள பாரிஸ் பல்கலைக்கழகம் சென்று, அதிவேக வளர்ச்சி தொழில் நுட்ப பாடப் பிரிவு பயின்று தேர்ச்சி பெற்று திரும்பியுள்ளார். உலகளவில் பல்வேறு நாடுகளில் இருந்து பாரிஸ் சென்று படிக்க தேர்ந்தெடுக்கப்பட்ட 20 மாணவர்களில் இவரும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது. இவருக்கு சான்றிதழை வேந்தர் வழங்கினார்.
மாணவியை வேந்தர் க.ஸ்ரீதரன், இயக்குநர் டாக்டர் எஸ்.சசிஆனந்த், துணை வேந்தர் ச.சரவணசங்கர், பதிவாளர் வெ.வாசுதேவன் உள்ளிட்டோர் பாராட்டினர்.