யூடியூபிலும் பிரதமா் மோடி புதிய சாதனை! 3 கோடி போ் பின்தொடரும் ஒரே அரசியல் தலைவா்பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு: தோ்வுக்கூட அனுமதிச் சீட்டு இன்று வெளியீடுஇந்தியாவிடம் போதிய அளவு கச்சா எண்ணெய் கையிருப்பு: மத்திய அமைச்சா் ஹா்தீப் சிங் புரிஇன்று முதல் அரையிறுதி ஆட்டம் - தென்னாப்பிரிக்காவுடன் மோதும் நியூஸிலாந்துமேற்காசியாவிலிருந்து இந்தியா்களை மீட்க இன்று 58 விமானங்கள் இயக்கம்: மத்திய அரசு நாளை வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சோதனை ஓட்டம்
/

போலீஸாரை கத்தியால் குத்த முயன்று தப்பி ஓடிய ரௌடி

ஸ்ரீவில்லிபுத்தூரில், போலீஸாரை கத்தியால் குத்த முயன்றுவிட்டு தப்பி ஓடிய ரௌடியை போலீஸார் தேடி வருகிறார்கள்.

News image
Updated On :25 அக்டோபர் 2015, 4:51 pm

கோ.ஜெயக்குமார்

ஸ்ரீவில்லிபுத்தூரில், போலீஸாரை கத்தியால் குத்த முயன்றுவிட்டு தப்பி ஓடிய ரௌடியை போலீஸார் தேடி வருகிறார்கள்.

ராஜாபாளையம், கிருஷ்ணாபுரத்தைச் சேர்ந்தவர் பிரபல ரௌடி ரமேஷ் (40). இவர் மீது ஏராளமான வழக்குகள் உள்ளன. இரு நாட்களுக்கு முன்னர் ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனைக்குள் சந்தேகப்படும் வகையில் ரமேஷ் நடமாடியுள்ளார். இந்நிலையில் இன்று இரவு ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனையில் நின்று கொண்டிருந்துள்ளார். அப்போது அங்கு பணிக்காக மம்சாபுரம் காவல் நிலைய காவலர் ராஜா வந்துள்ளார். இவர் ரௌடியைப் பார்த்தவுடன் அவரை பிடிக்க முயன்றுள்ளார்.

ஆனால் ரமேஷ் தனது பையிலிருந்து கத்தியை எடுத்து போலீஸாரை குத்த முயன்றுள்ளார். அவர் அதை தட்டிவிட்டு, அவனை பிடிக்க முயன்றபோது தப்பி ஓடிவிட்டான். சம்பவம் பற்றி ஸ்ரீவில்லிபுத்தூர் காவல் துணைக் கண்காணிப்பாளர் மற்றும் நகர் காவல் நிலையத்திற்கு காவலர் ராஜா தகவல் கொடுத்தார். அதன் பேரில் ஏராளமான போலீஸார் அரசு மருத்துவமனையில் சோதனையிட்டனர். ஆனால் ரௌடி தப்பிவிட்டார். இவரைப் பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.