கலசலிங்கம் பல்கலைக்கழகத்தில் 2-ம் ஆண்டு ஆட்டோமொபைல் துறையில் படிப்பவர் ஆர்.விக்னேஷ், மூன்றாம் ஆண்டு படிப்பவர்கள் சி.சங்கராஜா, எஸ்.ஜவஹர்ராஜா, ஜி.ஹரிகணேஷ்ராஜ் ஆகியோர் மற்றும் மெக்கானிக்கல் மாணவர்கள் சேர்ந்து மூன்று அணிகளாகப் பிரிந்து துறைத் தலைவர் உதயக்குமார், பேராசிரியர்கள் சாமி, பெத்துராஜ் ஆகியோர் ஆலோசனைப்படி இந்த இரு சக்கர வாகனத்தை வடிவமைத்துள்ளனர்.புதிய எஞ்ஜின் ஜேஸில் நீள அகலம் மாற்றி, பிரேக்கை புதிய அளவில் கூட்டி, அதிவேகமாக ஓடும் அளவில் எடைக்குறைத்து புதிய துகள்களைப் பயன்படுத்தி, மூன்று, இரண்டு சக்கர வண்டிகளை மூன்று மாதத்தில் வடிவமைத்துள்ளனர்.