100 சதவீத தேர்ச்சி: அரசுப் பள்ளியிலிருந்து மாணவர்கள் நீக்கப்பட்ட பிரச்னை
விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் அருகேயுள்ள அரசு மேல்நிலைப் பள்ளியிலிருந்து 100 சதவீதம் தேர்ச்சி காட்ட வேண்டும் என்பதற்காக பள்ளியிலிருந்து முறைகேடாக நீக்கப்பட்ட 10-ம் வகுப்பு மாணவர்கள் அரசுப் பொதுத் தேர்வு எழுதவும், தொடர்ந்து இதே பள்ளியில் சேர்ந்து படிப்பதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.










