பிளஸ் 2 தேர்வெழுதும் மாணவர்களை விட மாணவிகளே அதிகம்
தமிழகம், புதுவையில் பிளஸ் 2 பொதுத் தேர்வுகள், மொழிப் பாடம் முதல் தாளுடன் இன்று தொடங்குகின்றன.

தமிழகம், புதுவையில் பிளஸ் 2 பொதுத் தேர்வுகள், மொழிப் பாடம் முதல் தாளுடன் இன்று தொடங்குகின்றன.
தேர்வு எழுத இருப்பவர்களில் 3 லட்சத்து 91,806 பேர் மாணவர்கள். 4 லட்சத்து 47,891 பேர் மாணவிகள். மாணவர்களைவிட 56,085 மாணவிகள் கூடுதலாகத் தேர்வு எழுதுகின்றனர். இவர்களைத் தவிர, 42,347 பேர் தனித் தேர்வர்களாகத் தேர்வு எழுதப் பதிவு செய்துள்ளனர்.
சென்னை மாநகரில் 410 பள்ளிகளில் இருந்து 51,091 மாணவ-மாணவிகள் 145 தேர்வு மையங்களில் தேர்வு எழுத உள்ளனர். இவர்களில் 23,617 பேர் மாணவர்கள். 27,474 பேர் மாணவிகள்.
அதேபோல், புதுவையில் அமைக்கப்பட்டுள்ள 35 தேர்வு மையங்களில் 135 பள்ளிகளைச் சேர்ந்த 14,337 மாணவ-மாணவிகள் தேர்வு எழுத உள்ளனர். அவர்களில் 6,556 பேர் மாணவர்கள். 7,781 பேர் மாணவிகள். தமிழகம், புதுவையில் 2,421 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






