ஸ்ரீஆண்டாள் கோவிலில் மண்டலாபிஷேகம்
.ஸ்ரீவில்லிபுத்தூர், ஸ்ரீஆண்டாள் கோவிலில் தங்க விமானம் அமைக்கப்பட்டு கும்பாபிஷேகம் ஜனவரி 20-ம் நடைபெற்றதன் தொடர்ச்சியாக மண்டல பூஜை சனிக்கிழமை தொடங்கி திங்கள்கிழமை வரை மூன்று நாட்கள் நடைபெற்றது.


.ஸ்ரீவில்லிபுத்தூர், ஸ்ரீஆண்டாள் கோவிலில் தங்க விமானம் அமைக்கப்பட்டு கும்பாபிஷேகம் ஜனவரி 20-ம் நடைபெற்றதன் தொடர்ச்சியாக மண்டல பூஜை சனிக்கிழமை தொடங்கி திங்கள்கிழமை வரை மூன்று நாட்கள் நடைபெற்றது.
ஸ்ரீஆண்டாள்-ஸ்ரீரெங்கமன்னார் திவ்ய தம்பதிகளுக்கு மஹா சாந்தி ஹோமம், 108 கலச ஏகதின லட்சார்ச்சனை, மண்டலாபிஷேகம் ஆகியவை நடைபெற்றது.அனந்தராமன் பட்டர், சுதர்ஸன் பட்டர், ரெங்கராஜன் (எ) ரமேஷ் ஸ்தானிகம் உள்ளிட்டோர் மண்டலாபிஷேகத்தை நடத்தினர்.
நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கோவில் தக்கார் கி.ரவிச்சந்திரன், செயல் அலுவலர் ராமராஜா ஆகியோர் செய்திருந்தனர்.மண்டலாபிஷகத்தில் நகர்மன்றத் தலைவி வி.செந்தில்குமாரி, அதிமுக நகரச் செயலாளர் வி.டி.முத்துராஜ், நகர்மன்ற உறுப்பினர் மீராதனலட்சுமி முருகன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...