திருவெள்ளறை பெருமாள் கோயில் தேர்த் திருவிழா மார்ச் 25-ல் தொடக்கம்

சிறிரங்கம் அரங்கநாத சுவாமி திருக்கோயிலின் உபகோயிலான திருவெள்ளறை அருள்மிகு புண்டரீகாட்சப் பெருமாள் திருக்கோயில் தேர்த்திருவிழா 25-ம் தேதி தொடங்குகிறது.
Updated on
1 min read

சிறிரங்கம் அரங்கநாத சுவாமி திருக்கோயிலின் உபகோயிலான திருவெள்ளறை அருள்மிகு புண்டரீகாட்சப் பெருமாள் திருக்கோயில் தேர்த்திருவிழா 25-ம் தேதி தொடங்குகிறது.

பழைமைவாய்ந்த இத்திருக்கோயிலில் பங்குனி மாதத்தில் நடைபெறும் தேர்த்திருவிழா மிகவும் விசேஷமானதாகும். இந்தாண்டுக்கான தேர்த்திருவிழா மார்ச் 25-ம் தேதி  துவஜாரோஹணம் எனப்படும் கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.

இதைத் தொடர்ந்து மார்ச் 28ல் கருட சேவை புறப்பாடு, 30-ல் யானை வாகனம், 31-ல் பூந்தேர் உற்சவம் நடைபெறுகிறது.  ஏப்ரல் 1-ம் தேதி இரவு குதிரை வாகனத்தில் சுவாமி புறப்பாடும், முக்கிய நிகழ்வான தேரோட்டம் ஏப்ரல் 2-ம் தேதி காலை 8.30 மணிக்கும் நடைபெறுகிறது. ஏப்ரல் 4-ம் தேதி ஆளும் பல்லக்கு உற்சவம் நடைபெறும்.

தேர்த் திருவிழா உற்சவத்தில் திருவெள்ளறை, பூனாம்பாளையம், காளவாய்ப்பட்டி, தில்லாம்பட்டி, காட்டுக்குளம் உள்ளிட்ட சுற்றுவட்டாரக் கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் பங்கேற்பர் என்பதால், திருவிழாவுக்கான ஏற்பாடுகளைத் திருக்கோயில் நிர்வாகம் செய்து வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com