ஸ்ரீவில்லிபுத்தூரில் ஆண்டாள் செப்புத் தேரோட்டம்
ஸ்ரீவில்லிபுத்தூர், ஆண்டாள் திருக்கல்யாண உற்சவத்தையொட்டி, புதன்கிழமை செப்புத் தேரோட்டம் நடைபெற்றது.ஆண்டாள் திருக்கல்யாண உற்சவம் இம் மாதம் 15-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.


ஸ்ரீவில்லிபுத்தூர், ஆண்டாள் திருக்கல்யாண உற்சவத்தையொட்டி, புதன்கிழமை செப்புத் தேரோட்டம் நடைபெற்றது.ஆண்டாள் திருக்கல்யாண உற்சவம் இம் மாதம் 15-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
8-ம் திருநாளான செவ்வாய்கிழமை இரவு சுவாமிகள் வீதி எழுந்தருளி சாலியன்தோப்பு மண்டபத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். பின்னர் ஸ்ரீஆண்டாள் புஷ்ப பல்லாக்கிலும், ஸ்ரீரெங்கமன்னார் குதிரை வாகனத்திலும் கன்னியா லக்கினத்தில் தங்க தோளுக்கினியானில் திருத்தேர் கடாக்ஷித்தல் நடைபெற்றது.
புதன்கிழமை காலை ஸ்ரீரெங்கமன்னார்-ஸ்ரீஆண்டாள் செப்புத் திருத்தேர் கோரதம் எழுந்தருளல் நடைபெற்று, தேரோட்டம் நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு வடம் பிடித்து தேரை இழுத்தனர். நகர் காவல் ஆய்வாளர் ஜே.மகேஸ்குமார் தலைமையில் போலீஸார் பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்திருந்தனர்.நிகழ்ச்சியில் கோவில் தக்கார் கி.ரவிச்சந்திரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...