ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல் - உறுதிசெய்த ஐஏஇஏஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!போர்ப் பதற்றம்! மத்திய கிழக்கில் 10, 12 ஆம் வகுப்பு சிபிஎஸ்இ பொதுத் தேர்வுகள் ஒத்திவைப்பு!சமூக வலைதளங்களை விட்டு இளைஞர்கள் களத்திற்கு வர வேண்டும்: தமிழிசை செளந்தரராஜன்நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!ஈரான் உச்ச தலைவர் கமேனி படுகொலையை ஆதரிக்கிறாரா மோடி? ராகுல் கேள்விகூட்டணி இறுதியாகுமா? முதல்வர் மு.க. ஸ்டாலினுடன் ப. சிதம்பரம் சந்திப்பு!முதியோர் உதவித்தொகை கூடுதலாக ரூ. 2,000 வரவு வைப்பு: முதல்வர் ஸ்டாலின்!
/

கண்மாயில் கிராவல் மண் திருட்டு: 7 பேர் கைது: 6 வாகனங்கள் பறிமுதல்

விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே கண்மாயில் கிராவல் மண் திருடியது தொடர்பாக 7 பேரை போலீஸார் கைது செய்து அவர்கள் மண் திருட்டிற்கு பயன்படுத்தி 6 வாகனங்களையும் பறிமுதல் செய்தனர்.வன்னியம்பட்டி விலக்கு தொடங்கி சத்திரப்பட்டி சாலை முடியும் வரை சித்தர்குளம் கண்மாய் உள்ளது.

News image
Updated On :27 மார்ச் 2016, 3:46 am

கோ.ஜெயக்குமார்

விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே கண்மாயில் கிராவல் மண் திருடியது தொடர்பாக 7 பேரை போலீஸார் கைது செய்து அவர்கள் மண் திருட்டிற்கு பயன்படுத்தி 6 வாகனங்களையும் பறிமுதல் செய்தனர்.வன்னியம்பட்டி விலக்கு தொடங்கி சத்திரப்பட்டி சாலை முடியும் வரை சித்தர்குளம் கண்மாய் உள்ளது.

இங்கு அரசு அனுமதிக்கப்பட்ட குவாரி இடம் உள்ளது. குவாரி மேற்பார்வையாளராக விருதுநகர் முல்லைநகர் ச.ஜனார்த்தனன் (55) என்பவர் உள்ளார். இந்த குவாரியில் அளவுக்கதிகமாக மண் எடுக்கப்படுவதாயும், ஒதுக்கப்படாத கண்மாயில் கிராவல் மண் திருடி எடுக்கப்படுவதாயும் தொடர்ந்து புகார் வந்தது. இதன் பேரில் பொதுப்பணித் துறை உதவி பொறியாளர் அழகர்சாமி, மற்றும் வருவாய்த் துறையினர் வெள்ளிக்கிழமை இந்த இடத்தை திடீர் ஆய்வு செய்தனர்.

அப்போது அரசு அலுவலர்களை, மேற்பார்வையாளர் ஜனார்த்தனன் மிரட்டும் வகையில் நடந்து கொண்டாராம். மேலும் அரசு விதிமுறைகளை மீறி அத்துமீறி சென்று இங்கு மண் திருடி, கண்மாயை சேதப்படுத்திக் கொண்டிருந்துள்ளார்கள்.இந்த திருட்டில் ஈடுபட்ட இரு ஜேசிபி இயந்திரங்கள், 3 டிராக்டர், ஒரு டிப்பர் லாரி மற்றும் 7 யூனிட் மண் பறிமுதல் செய்யப்பட்டது.

பொறியாளர் அழகர்சாமி, வன்னியம்பட்டி காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் போலீஸார் வழக்குப் பதிவு செய்து, குவாரி மேற்பார்வையாளர் ச.ஜார்த்தனன், டிரைவர்கள் தேசிகாபுரம் கு.மதன்ராஜ் (30), ச.பால்ராஜ் (30), மங்காபுரம் மேல்பக்கம் வடக்குத் தெருவைச் சேர்ந்த ரா.மணிமலையன் (24), சீ.ராகவன் (35), இ.மாரிக்கனி (24), அத்திகுளத்தைச் சேர்ந்த மு.முனியசாமி (31) ஆகியோரைக் கைது செய்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.