ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா எம்.ஜி.ஆர் அம்மா தீபா பேரவை சார்பில் போட்டியிடுகிறார். அவருக்கு படகுச் சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது.
எனினும் தீபாவுக்கு வேட்பாளர் பட்டியலில் 34வது இடம்தான் கிடைத்துள்ளது. அதாவது சுயேச்சைகள் வரிசையில்தான் அவர் இருக்கிறார். அவரது பெயரை தேடித்தான் கண்டுபிடிக்க வேண்டும்.
அதிமுக அம்மா கட்சி வேட்பாளர் தினகரன் 2வது இடத்தில் இருக்கிறார். அதிமுக புரட்சித் தலைவி அம்மா கட்சி வேட்பாளர் மதுசூதனனுக்கு பெயர் வரிசையில் 4வது இடம் கிடைத்துள்ளது.
மது சூதனன், தினகரனுக்கு கிடைத்த அங்கீகாரம் தீபாவுக்குக் கிடைக்கவில்லை என்பது அவரது ஆதரவாளர்களை மிகவும் கவலையடையச் செய்துள்ளது.