சென்னை: எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைக்கழக துணைவேந்தர் கீதாலட்சுமிக்கு உயர்நீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
விசாரணைக்கு நேரில் ஆஜராகும்படி வருமான வரித்துறை அனுப்பிய சம்மனை ரத்து செய்யக் கோரியும், விசாரணைக்கு தடை விதிக்கக் கோரியும், சென்னை உயர் நீதிமன்றத்தில் துணைவேந்தர் டாக்டர் எஸ்.கீதாலட்சுமி மனு தாக்கல் செய்துள்ளார்.
இதற்கு கடும் கண்டனம் தெரிவித்த சென்னை உயர்நீதிமன்றம் கீதாலட்சுமி மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. கீதாலட்சுமி வீட்டில் கடந்த வெள்ளிக்கிழமை வருமான வரித்துறை சோதனை நடத்தியது குறிப்பிடத்தக்கது.