நடிகர் சரத்குமார் வீட்டில் வருமானவரித் துறையினர் மீண்டும் சோதனை
சென்னை கொட்டிவாக்கத்தில் உள்ள சரத்குமார் வீட்டில் வருமானவரித் துறையினர் மீண்டும் சோதனை நடத்திவருகின்றனர்.


சென்னை: சென்னை கொட்டிவாக்கத்தில் உள்ள சரத்குமார் வீட்டில் வருமானவரித் துறையினர் மீண்டும் சோதனை நடத்திவருகின்றனர்.
இன்னும் கூடுதலாக ஆவணங்கள் கிடைத்துள்ளதாக தெரிகிறது. நடிகர் சரத்குமாரின் கொட்டிவாக்கம் இல்லத்தில் கடந்த 7-ஆம் தேதியன்று வருமான வரித்துறையினர் 'திடீர்' சோதனை நடத்தினார்கள். அதனைத் தொடர்ந்து அவரை நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்குமாறு வருமான வரித்துறை சம்மன் அனுப்பியிருந்தது.
நேற்று காலை 11.30 மணி அளவில் நுங்கம்பாக்கத்தில் உள்ள வருமான வரித்துறை அலுவலகத்தில் ஆஜரான அவரிடம் இரவு 7.20 மணி வரை தொடர் விசாரணை நடந்தது.
இந்நிலையில் அவரது மனைவியும் நடிகையுமான ராதிகாவுக்கு சொந்தமான ராடன் மீடியா நிறுவனத்தில் தற்பொழுது வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். இதையடுத்து மீண்டும் கொட்டிவாக்கத்தில் உள்ள சரத்குமார் வீட்டில் வருமானவரித் துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...