மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

கதிராமங்கலம் கூட்டத்தில் பேசிய வைகோ திடீர் 'மயக்கம்'

கதிராமங்கலம் கூட்டத்தில் பேசிக்கொண்டிருந்த மதிமுக பொதுச் செயலாளர் வைகோ திடீரென மேடையிலேயே மயங்கி விழுந்தார்.

News image
Updated On :10 ஜூலை 2017, 10:03 am

DIN

கதிராமங்கலத்தில் எரிவாயு குழாய் பதிப்பதை எதிர்த்து அப்பகுதி மக்கள் கடந்த சில தினங்களாக போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இந்தப் போராட்டத்தில் பங்கேற்பவர்கள் தொடர்ந்து கைது செய்யப்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில், போராட்டத்தில் ஈடுபடுபவர்களை கைது செய்வதை கண்டித்து கதிராமங்கலத்தில் பேரணி மற்றும் கண்டனப் பொதுக்கூட்டத்துக்கு திங்கள்கிழமை ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இதில், மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கலந்து கொண்டார். முதலில் பேரணியில் பங்கேற்று பிறகு நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் வைகோ பேசத் தொடங்கினார்.

மேடையில் பேசிக் கொண்டிருக்கும் போது திடீரென மயங்கி விழுந்தார். இதனால் அங்கு சிறிது நேரம் பதட்டமான சூழ்நிலை காணப்பட்டது.

பின்னர், சுதாரித்து எழுந்த வைகோ, தண்ணீர் குடித்து விட்டு மீண்டு தனது உரையைத் தொடர்ந்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.