மும்பை: மும்பை பங்குச் சந்தையில் இன்று காலை வர்த்தகம் தொடங்கியதும் சென்செக்ஸ் குறியீட்டு எண் 54 புள்ளிகள் உயர்ந்து 32,074 புள்ளிகளாக உள்ளது.
தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிப்டி 29 புள்ளிகள் உயர்ந்து 9,915 புள்ளிகளாக உள்ளது. அதேசமயத்தில் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 3 காசுகள் உயர்ந்து 64.32 ரூபாயாக உள்ளது.
நேற்று வர்த்தக நேர முடிவில் டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 64.36 ஆக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.