யுஜிசி, ஏஐசிடிஇ ஆகிய இரு அமைப்புகளையும் கலைக்க மத்திய அரசு முடிவு

யுஜிசி, ஏஐசிடிஇ ஆகிய இரு அமைப்புகளையும் கலைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
யுஜிசி, ஏஐசிடிஇ ஆகிய இரு அமைப்புகளையும் கலைக்க மத்திய அரசு முடிவு

யுஜிசி, ஏஐசிடிஇ ஆகிய இரு அமைப்புகளையும் கலைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. யுஜிசி, ஏஐசிடிஇ அமைப்புகளுக்கு பதிலாக உயர்கல்வி அதிகார ஒழுங்குமுறை வாரியம் அமைக்கப்படும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

யுஜிசி, ஏஐசிடிஇ அமைப்பு கலைப்பு தொடர்பான சட்ட மசோதா விரைவில் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. மேலும் இந்த சீர்திருத்த நடவடிக்கைகள் மூலம் அதிகார வர்க்கத்தின் முறைகேடுகளை களைய முடியும் என்றும் மனித வள மேம்பாடு (HRD) அமைச்சகம் மற்றும் நிதி ஆயோக் இணைந்து புதிய சட்டத் திருத்தங்களை கொண்டு வர உள்ளது.

உயர்கல்வி அதிகார ஒழுங்குமுறை வாரியத்தில் நிதிஆயோக்  தலைமை நிர்வாக அதிகாரி அமிதாப் காந்த் மற்றும் உயர் கல்வி செயலாளர் கே.கே.சர்மா ஆகியோர்  உறுப்பினர்களாக இருப்பார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com