கர்ப்பிணிப் பெண்ணை செவிலியர்கள் தரக்குறைவாக திட்டியதைக் கண்டித்து, பெண் மற்றும் உறவினர்கள் திருச்சி அரசு மருத்துமனை முன் நள்ளிரவில் சாலை மறியல் மேற்கொண்டனர்.
திருச்சி பாலக்கரை ஆலம்தெருவைச் சேர்ந்தவர் ராபர்ட் மனைவி ஆமலிராணி (26). நிறைமாத கர்ப்பிணியான அவர் புதன்கிழமை காலை பிரசவத்துக்காக மருத்துவமனையில் சேர்ந்துள்ளார். இரவு அவருக்கு பல்வேறு மருத்துவப் பரிசோதனைகள் மேற்கொள்வதற்காக சோதனைக்கூடத்துக்கு சென்றார். அப்போது பணியிöலிருந்த செவிலியர்கள், புடவை உடுத்தாமல் சுடிதார் அணிந்துவந்தற்காக தரக்குறைவாக அமலிராணியை திட்டியதாக கூறப்படுகின்றது.
இது குறித்து அவரும் குடும்பத்தினரும் எதிர்த்து கேட்டுள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த செவிலியர்கள் அவரை வெளியே தள்ளுமாறு காவலர்களிடம் கூறியுள்ளனர். இதனையடுத்து சக நோயாளிகள் மற்றும் உறவினர்கள் செவிலியர்களிடம் வாக்குவாதம் செய்துள்ளனர். ஆனால் அவர்கள் சமாதானம் அடைவில்லை. இதனைக் கண்டித்து கர்ப்பிணிப் பெண் அவரது உறவினர்கள் உள்ளிட்ட பலரும் சேர்ந்து நள்ளிரவில் சாலை மறியல் மேற்கொண்டனர். தகவலறிந்த போலீஸôர் மற்றும் மருத்துவ அதிகாரிகள் வந்து சமாதானம் செய்து போராட்டத்தை கைவிடச்செய்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

கந்துலா சுலோச்சனா ராணியாக அனுபமா பரமேஸ்வரன்!

பணமோசடி வழக்கு: ஐ-பேக் இயக்குநர் வினேஷ் சண்டேலுக்கு ஜாமீன்!

திருப்பத்தூரில் மறுவாக்குப்பதிவு கோரிய மனு தள்ளுபடி!

ஆட்சியைப் பிடிக்கும் தவெக? ஆக்சிஸ் மை இந்தியா கணிப்புகளை நம்பலாமா.?
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

