ஆஸ்கர் விருது விழா கோலாகலம்! தென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புவெனிசுலா: 7 ஆண்டுகளுக்குப் பின் அமெரிக்க தூதரகம் மீண்டும் திறப்புயாருடன் கூட்டணி? : இன்று அறிவிக்கிறார் ராமதாஸ்11 மாநிலங்களவை இடங்களுக்கு இன்று தோ்தல்குழாய் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு சிலிண்டர் கிடையாது: மத்திய அரசு
/

தமிழக விவசாயிகளுடன் ராகுல் இன்று சந்திப்பு

தில்லியில் போராட்டம் நடத்தி வரும் விவசாயிகளை அகில இந்திய காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல்காந்தி வியாழக்கிழமை (மார்ச் 30) சந்திக்க உள்ளதாக காங்கிரஸ் கட்சியின் தமிழகத் தலைவர் சு.திருநாவுக்கரசர் கூறினார்.

News image
Updated On :30 மார்ச் 2017, 12:47 pm

தினமணி

தில்லியில் போராட்டம் நடத்தி வரும் விவசாயிகளை அகில இந்திய காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல்காந்தி வியாழக்கிழமை (மார்ச் 30) சந்திக்க உள்ளதாக காங்கிரஸ் கட்சியின் தமிழகத் தலைவர் சு.திருநாவுக்கரசர் கூறினார்.

சென்னை சத்தியமூர்த்திபவனில் புதன்கிழமை அவர் அளித்த பேட்டி: தில்லியில் போராட்டம் நடத்திவரும் விவசாயிகளை ராகுல்காந்தி வியாழக்கிழமை நேரில் சந்தித்து, அவர்களின் கோரிக்கைகளைக் கேட்டறிய உள்ளார். அவருடன் நானும் செல்கிறேன் என்றார்.

விவசாயிகள் போராட்டத்துக்கு ஆதரவு: முன்னதாக சு.திருநாவுக்கரசர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பது: தமிழகம் வறட்சியின் கோரப்பிடியில் சிக்கித் தவித்து வருகிறது. தமிழகத்தில் ஏற்பட்டுள்ள வறட்சியை எதிர்கொள்ள அதிமுக அரசு நரேந்திர மோடி அரசிடம் ரூ.39 ஆயிரம் கோடி வறட்சி நிவாரணம் கேட்டது.

ஆனால், மத்திய பாஜக அரசோ ரூ.1,748 கோடிதான் ஒதுக்கியுள்ளது. பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 15 நாள்களாக தில்லி ஜந்தர்மந்தரில் விவசாய சங்கங்களின் தலைவர் வி. அய்யாக்கண்ணு தலைமையில் தொடர் போராட்டம் நடைபெற்று வருகிறது.

தமிழக விவசாய சங்கங்களின் கூட்டமைப்பின் சார்பில் ஏப்ரல் 3-இல் பொது வேலை நிறுத்தம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு ஆதரவு தெரிவிப்பதால், இதே நாளில் மத்திய அரசைக் கண்டித்து காங்கிரஸ் சார்பில் நடைபெற இருந்த போராட்டம் ஏப்ரல் 5-ஆம் தேதி நடைபெறும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.