தமிழ்நாடு அரசின் சிறந்த நூல்களுக்கான பரிசுக்கு எழுத்தாளர்கள் விண்ணப்பிக்கலாம்!தமிழகத்தில் ராஜஸ்தபதி காளியப்ப கவுண்டர், பேராசிரியர் கே. ராமசாமி, திருவாரூர் பக்தவத்சலம் ஆகியோர் பத்ம ஸ்ரீ பெற்றனர்.ஜூலை 1-ல் பொறியியல் மாணவர் சேர்க்கை தரவரிசைப் பட்டியல் வெளியீடு!கல்வித்துறை மற்றும் தொழில்நுட்ப முன்னேற்றத்திற்கு ஆற்றிய சிறந்த பங்களிப்பிற்காக, சென்னை ஐஐடி இயக்குனர் பேராசிரியர் வீ. காமகோடிக்கு பத்ம ஸ்ரீ விருதுதொழிலதிபர் எஸ்.கே. மயிலானந்தனுக்கு பத்ம பூஷண்! அரசுப் பள்ளிகளில் காலியாக உள்ள 18,107 பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை தேவை - அன்புமணி ராமதாஸ்தமிழ்நாட்டின் முதலீடுகளை சீர்குலைக்கும் தவெக அரசு இனியாவது ஆக்கப்பூர்வமான பணிகளில் கவனம் செலுத்த வேண்டும்: டிஆர்பி ராஜா
/

அதிமுக இரு அணிகளும் இணைந்து செயல்பட வேண்டும்: ஏ.சி.சண்முகம்

அதிமுக இரு அணிகளும் இணைந்து செயல்பட வேண்டும் என புதிய நீதிக்கட்சியின் நிறுவனர் ஏ.சி.சண்முகம் கூறினார்.

Updated On :2 மே 2017, 8:16 am IST

ஆரணி: அதிமுக இரு அணிகளும் இணைந்து செயல்பட வேண்டும் என புதிய நீதிக்கட்சியின் நிறுவனர் ஏ.சி.சண்முகம் கூறினார்.

ஆரணிக்கு வந்திருந்த ஏ.சி.சண்முகம் செய்தியாளர்களிடம் கூறியதாவது: வளரும் நாடுகளில் வாக்குச் சீட்டு முறையே நடைமுறையில் உள்ளது. இந்தியாவிலும் வாக்குச் சீட்டு முறையைப் பயன்படுத்த வேண்டும். அதிமுக இரு அணிகளும் இணைந்து செயல்பட வேண்டும். அதிமுக உருவானபோது அதில் நானும் ஒருவனாக இருந்திருக்கிறேன். அதிமுக உடைந்து செல்வதை நான் விரும்பவில்லை.

தற்போதைய பிரச்னையால் அரசு நிர்வாகம் செயல்படாமல் உள்ளது. மக்கள் நலன் கருதி இணைந்து செயல்பட வேண்டும்.

இந்தியாவில் வறட்சி, வெள்ளப் பெருக்கு மாறி மாறி ஏற்படுகிறது. எனவே, நதிகளை இணைக்க வேண்டும். விவசாயி அய்யாக்கண்ணுவின் கோரிக்கைகள் நிறைவேற்றப்பட வேண்டும்.

தமிழகத்தின் நலன் கருதி "நீட்' தகுதித் தேர்வை ரத்து செய்ய வேண்டும். இதனை சிபிஎஸ்இ பயிலும் மாணவர்களால்தான் எழுத முடியும் என்ற நிலை உள்ளது.

இதனால், தமிழகத்தில் 90 சதவீதம் மாணவர்கள் பாதிக்கப்படுவார்கள் என்றார் அவர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.