டி20 உலக கோப்பையில் இங்கிலாந்து த்ரில் வெற்றி..! கேஜரிவால் விடுதலையை எதிர்த்து தில்லி உயர்நீதிமன்றத்தில் சிபிஐ மேல்முறையீடு!தமிழக வரலாற்றில் ஒரு கூட்டணி நீண்ட காலமாக வெற்றிகரமாகத் தொடருவது இதுவே முதல்முறை - முதல்வர் ஸ்டாலின் சென்னை மெட்ரோ ரயில் பணி: கலங்கரை விளக்கம் முதல் திருமயிலை வரை சுரங்கம் தோண்டும் பணி நிறைவுஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ள 12 பேரின் ஜாமீன் ரத்து மலையாள நடிகர் திலீப் விடுதலையை எதிர்த்து கேரள அரசு உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு!அதிமுகவில் மீண்டும் இணைந்தார் வெல்லமண்டி நடராஜன்இஸ்ரேலில் இருந்து வெளியேற அமெரிக்க குடிமக்களுக்கு அறிவுறுத்தல்!கோவையில் மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு: மார்ச் 7-இல் தீர்ப்பு!தேவைப்பட்டால் நடிகையின் பெயரையும் வழக்கில் சேர்ப்பேன்: விஜய்யின் மனைவி சங்கீதாபிரதமர் மோடி நாளை தமிழகம் வருகிறார்! மார்ச் 1-ல் புதுச்சேரி பயணம்!நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல்ஆப்கானிஸ்தானுடன் போர் - பாகிஸ்தான்பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!
/

செல்லிடப்பேசி எண்ணுடன் ஆதார் இணைக்காவிட்டால் இணைப்பு துண்டிக்கப்படுமா?

செல்லிடப்பேசி எண்ணுடன் ஆதார் இணைக்காவிட்டால் இணைப்பு துண்டிக்கப்படாது என்று தொலைத்தொடர்புத் துறை அறிவித்துள்ளது.

News image
Updated On :29 ஜனவரி 2024, 6:04 pm

DIN

புதுதில்லி: செல்லிடப்பேசி எண்ணுடன் ஆதார் இணைக்காவிட்டால் இணைப்பு துண்டிக்கப்படாது என்று தொலைத்தொடர்புத் துறை அறிவித்துள்ளது.

செல்லிடப் பேசி எண்ணுடன் ஆதாரை இணைக்கக்கோரி, மத்திய தொலைத் தொடர்பு துறை கடந்த மார்ச் மாதம் 23-ஆம் தேதி உத்தரவிட்டது. இதற்கு இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தொடரப்பட்ட வழக்கில், செல்லிடப் பேசி எண்ணுடன் ஆதாரை ஓராண்டுக்குள் கட்டாயமாக இணைக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் கடந்த பிப்ரவரி மாதம் தீர்ப்பளித்திருந்தது.

இதையடுத்து, நாடு முழுவதும் செல்லிடப் பேசி எண்களுடன் ஆதாரை இணைக்கும் பணியில் தொலைத் தொடர்பு நிறுவனங்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளன.

இந்நிலையில், உச்ச நீதிமன்றத்தில் தஹ்சீன் பூனாவாலா என்பவர் செல்லிடப் பேசி எண்ணுடன் ஆதாரை இணைக்கக்கோரி, மத்திய தொலைத் தொடர்பு துறை வெளியிட்ட அறிவிக்கையை அரசியலமைப்புச் சட்டத்துக்கு எதிரானது, செல்லாது என்று அறிவித்து தள்ளுபடி செய்ய வேண்டும் என்று கோரியுள்ளார்.

இந்த மனு, உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஏ.கே. சிக்ரி, அசோக் பூஷண் ஆகியோர் முன்பு திங்கள்கிழமை பரிசீலிக்கப்பட்டது.  அப்போது மனுதாரர் சார்பில் ஆஜராக வேண்டிய மூத்த வழக்குரைஞர் கே.டி.எஸ். துளசி உச்ச நீதிமன்றத்துக்கு வரவில்லை. இதுகுறித்து நீதிபதிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதைக் கேட்ட நீதிபதிகள், மனு மீதான விசாரணை வரும் 13-ஆம் தேதி நடைபெறும் என்று அறிவித்தனர். 

அரசுத் திட்டங்களின் சலுகைகளைப் பெற ஆதாரை இணைக்க விதிக்கப்பட்டிருந்த காலக்கெடு அடுத்த ஆண்டு மார்ச் மாதம் 31-ஆம் தேதி வரையிலும் நீட்டிக்கப்பட்டிருப்பதாக மத்திய அரசு தரப்பு தெரிவித்தது. செல்லிடப்பேசி எண்ணுடன் ஆதார் இணைக்க டிசம்பர் 6-ஆம் தேதி கடைசி நாளாகும் என்று மத்திய அரசு தெரிவித்திருந்தது.

இந்நிலையில், தொலைத்தொடர்புத் துறை செயலாளர் அருணா சுந்தரராஜன் தில்லியில் செய்தியாளர்களிடம் கூறியதாவது, செல்லிடப் பேசி எண்களுடன் ஆதார் இணைப்பது குறித்து உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புக்காக காத்திருக்கிறோம் என்றார்.

செல்லிடப்பேசி இணைப்பை அளிப்பதை தவிர துண்டிப்பது அரசின் நோக்கம் அல்ல என்றும் எதையும் துஷ்பிரயோகம் செய்யாமல் இருக்க வேண்டும் என்பதே எங்கள் விருப்பம் என்று கூறினார். 

"வெளிநாட்டில் உள்ளவர்களுக்கான செல்லிடப்பேசி எண்ணுடன் ஆதார் இணைப்புக்கான மாற்று வழிகளுக்கான ஏற்பாடுகளை செய்து வருகிறோம் என்று தொலைத்தொடர்புத் துறை அமைச்சர் மனோஜ் சின்ஹா தெரிவித்துள்ளார். 
  
சேவையை தொடர்ந்து பெற உங்களின் செல்லிடப்பேசி எண்ணுடன் ஆதார் இணைத்துவிடுங்கள் என்று கூறி தொலைத்தொடர்பு நிறுவனங்கள் தங்களின் வாடிக்கையாளர்களுக்கு குறுஞ்செய்தி அனுப்பி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

டிசம்பர் 1-ஆம் தேதி முதல், செல்லிடப்பேசி சில்லறை விற்பனையாளர்களைப் பார்க்காமல் ஒரு கடவுச்சொல் (OTP) மூலம் செல்லிடப்பேசி சந்தாதாரர்கள் தங்கள் எண்ணிக்கையை மீண்டும் சரிபார்க்க முடியும் என்று யுஐடிஏஐ ஏற்கனவே கூறியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.