தெலங்கானா: தெலங்கானா மாநிலம் சூரபேட்டை மாவட்டம் மமிலாகத்தா பகுதியில் வசித்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த கணவன், மனைவி மற்றும் குடும்ப உறுப்பினர்கள் என 6 பேர் சனிக்கிழமை பூச்சிக்கொல்லி மருந்தை குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சம்பவ இடத்திற்கு வந்த போலீஸார், பிரேதங்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
தற்கொலை குறித்து வழக்குப்பதிவு செய்த போலீஸார் நடத்திய விசாரணையில், குடும்பத்தில் நிலவிய கடுமையான நிதி நெருக்கடிதான் தற்கொலைக்குக் காரணம் என தெரியவந்துள்ளது.