மகளிர் இடஒதுக்கீட்டுக்கு ஆதரவு; தொகுதி மறுவரையறைக்கு எதிர்ப்பு! - ராகுல்தொகுதி மறுசீரமைப்புக்கு எதிர்ப்பு: தனிப்பட்ட இயக்கத்தின் போராட்டம் அல்ல; தமிழ்நாட்டின் போராட்டம் - மு.க. ஸ்டாலின்பாக். மூலம் அமெரிக்காவுடன் தொடரும் பேச்சு! - ஈரான் அரசு அறிவிப்பு!அதிமுக அரசின் ஏதாவது ஒரு சாதனையைக் கூறி பழனிசாமியால் ஓட்டு கேட்க முடியுமா? மு.க. ஸ்டாலின்தேர்தல் முக்கியமல்ல, சுயமரியாதையே முக்கியம் : மு.க. ஸ்டாலின் உ.பி.யில் 17 வயது சிறுமிக்கு கூட்டுப் பாலியல் வன்கொடுமை! தூக்கிட்டுத் தற்கொலை!சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு முடிவுகள் வெளியீடுமீஞ்சூரில் மாணவியிடம் பாலியல் அத்துமீறல்! அரிவாளால் வெட்டிய இளைஞர்கள்! திமுக தோற்க வேண்டும் என ராகுல் நினைக்கிறார்: அண்ணாமலை பேச்சுதொகுதி மறுவரையறை! தமிழ்நாட்டில் நாளை கருப்புக் கொடிப் போராட்டம்! - மு.க. ஸ்டாலின் அறிவிப்பு
/

ஜாடிக்கேற்ற மூடி போல மத்திய, மாநில ஆட்சிகள் செயல்படுகின்றன: மு.க.ஸ்டாலின் பேச்சு

ஜாடிக்கேற்ற மூடி போல மத்திய, மாநில ஆட்சிகள் செயல்பட்டு வருகின்றன என திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார். 

News image
Updated On :9 ஏப்ரல் 2018, 8:47 am

ஜாடிக்கேற்ற மூடி போல மத்திய, மாநில ஆட்சிகள் செயல்பட்டு வருகின்றன என திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார். 

காவிரி உரிமை மீட்பு பயணத்தை திருச்சி முக்கொம்புவில் இருந்து சனிக்கிழமை தொடங்கினார். தொடர்ந்து இரண்டாவது நாளாக நேற்று ஞாயிற்றுக்கிழமை தஞ்சாவூர் மாவட்டம் திருவோணம் அருகே சில்லத்தூர் கிராமத்தில் தொண்டர்கள் மத்தியில் உரையாற்றினார். 

அப்போது, காவிரிக்காக போராடிய தங்கள் மீது பல பிரிவுகளின் கீழ் வழக்குப் போட்டது குறித்து அஞ்சவில்லை என்றும், காவிரிக்காகப் போராடி ஆயுள் முழுவதும் சிறையில் அடைத்தாலும் கவலைப்படப் போவதில்லை என்றும் அவர் தெரிவித்தார்.

இந்நிலையில், இன்று காலை அன்னப்பன்பேட்டையில் தனது 3-ஆம் நாள் பயணத்தை தொடங்கினார் மு.க.ஸ்டாலின். ஸ்டாலின் நடைப்பயணத்தில் இந்திய கம்யூனிஸ்ட்
மாநிலச் செயலர் முத்தரசன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் செயலர் ஜி. ராமகிருஷ்ணன் ஆகியோர் பங்கேற்றுள்ளனர். 

இரும்புதலை, திருக்கருக்காவூர், சாலியமங்கலம் உள்பட 10 கிராமங்கள் வழியாக, காவிரி உரிமை மீட்பு பயணத்தை மேற்கொண்டுள்ள மு.க.ஸ்டாலின், வழிநெடுகிலும், விவசாயிகளையும், பொதுமக்களையும் சந்தித்து, குறைகளை கேட்டறிந்தார். 

பிற்பகலில் அம்மாப்பேட்டை அருகே புத்தூரில் பொதுமக்களிடையே உரையாற்றிய ஸ்டாலின், ஜாடிக்கேற்ற மூடி போல செயல்பட்டு வரும் மத்திய-மாநில அரசுகள் விவசாயிகளுக்கு துரோகம் செய்து வருவதாக குற்றம்சாட்டினார்.

மெலட்டூர், திருக்கருக்காவூர், சாலியமங்கலம், சூழியக்கோட்டை, அம்மாபேட்டை, அமராவதி, வெட்டாற்றுபாலம் வழியாக நீடாமங்கலத்தை சென்றடைகிறார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.