புதிய முகவரிக்கு குடிபெயர்ந்தார் நிதீஷ் குமார்! 98.47 சதவீத ரூ.2,000 நோட்டுகள் திரும்பிவிட்டன: ரிசா்வ் வங்கி மேற்கு வங்கம்: 15 வாக்குச்சாவடிகளில் நாளை மறுவாக்குப்பதிவு! ஜிஎஸ்டி வருவாய் ரூ. 2.43 லட்சம் கோடியாக உயர்வு! கொடைக்கானலில் வாகனங்களுக்கு 2 நாள் இலவச அனுமதி! தங்கம் விலை ஒரேநாளில் 2ஆவது முறையாக குறைவு! தேர்தல் முடிந்தவுடன் சிலிண்டர் விலையை உயர்த்திய பாஜக அரசு: மு.க. ஸ்டாலின் கண்டனம் வணிக சிலிண்டர் விலை உயர்வு ஒவ்வொருவரின் உணவுத் தட்டிலும் எதிரொலிக்கும்! ராகுல் கண்டனம் ம.பி. படகு விபத்து! தாய் - மகன் கட்டிப்பிடித்தபடி உடல்கள் மீட்பு!
/

தடையை மீறி பேரணி சென்ற காங்கிரஸ் கட்சியினர் கைது 

சென்னையில் தடையை மீறி அடையாறில் இருந்து சேப்பாக்கம் வரை பேரணி சென்ற காங்கிரஸ் கட்சியினர் போலீஸார் கைது செய்துள்ளனர். 

Updated On :9 ஏப்ரல் 2018, 4:40 am

சென்னை: சென்னையில் தடையை மீறி அடையாறில் இருந்து சேப்பாக்கம் வரை பேரணி சென்ற காங்கிரஸ் கட்சியினர் போலீஸார் கைது செய்துள்ளனர். 

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசுக்கு எதிராக நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சியினர் இன்று திங்கள்கிழமை (ஏப்.9) உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 

இந்நிலையில், எஸ்.சி- எஸ்.டி. வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் உச்சநீதிமன்றம் திருத்தம் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னை சேப்பாகத்தில் உண்ணாவிரதம் இருக்க கராத்தே தியாகராஜன் தலைமையில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர்கள் ஊர்வலமாக சென்றனர். அவர்களை தடுத்து நிறுத்தி போலீஸார் கைது செய்துள்ளனர்.

தில்லியில் நடைபெற்று வரும் உண்ணாவிரதத்தில் ராகுல் காந்தி, தில்லி காங்கிரஸ் தலைவர் அஜய் மாக்கன் உள்ளிட்டோர் பங்கேற்கற்று உள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.