பாமக பேரவைக் குழு தலைவராக செளமியா அன்புமணி தேர்வு!கோயில்கள், பள்ளி, கல்லூரிகள் அருகே உள்ள டாஸ்மாக் கடைகளை மூட முதல்வர் விஜய் உத்தரவிட உள்ளதாக தகவல்தமிழகத்தில் மே 17 வரை மிதமான மழை! வானிலை ஆய்வு மையம்அதிமுகவில் பிளவு! சி. வி. சண்முகம் ஆதரவு எம்எல்ஏக்களுடன் பேரவை தற்காலிக தலைவரிடம் கடிதம்வைகோ, அன்புமணி ராமதாஸ், சீமானைச் சந்தித்து வாழ்த்துப் பெற்றார் முதல்வர் விஜய்பாமக தலைவர்களை பெருமைப்படுத்துவேன்: செளமியா அன்புமணிபெரியார், அண்ணா கொள்கைகள் விஜய் மூலம் கொண்டுசெல்லப்படும்: துரை வைகோதமிழ்நாட்டில் 193 கோடீஸ்வர எம்.எல்.ஏ.க்கள்! சராசரி சொத்து மதிப்பு ரூ. 48.35 கோடி!தமிழ்நாட்டில் 126 எம்.எல்.ஏ.க்கள் மீது கிரிமினல் வழக்குகள்! முதலிடத்தில் தவெக!
/

ராஜ்காட் - சாந்தி வன் பகுதியை அழகுப்படுத்தும் திட்டத்துக்கு தில்லி அரசு ஒப்புதல்!

ராஜ்காட் - சாந்தி வன் இடையேயான சுற்றுச் சாலைப் பகுதியை அழகுபடுத்தும் திட்டத்திற்கு தில்லி அரசு ஒப்புதல் அளித்துள்ளதாக பொதுப் பணித் துறை (பி. டபிள்யூ. டி.) வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளது.

News image
Updated On :2 மே 2026, 4:00 am IST

ராஜ்காட் - சாந்தி வன் இடையேயான சுற்றுச் சாலைப் பகுதியை அழகுபடுத்தும் திட்டத்திற்கு தில்லி அரசு ஒப்புதல் அளித்துள்ளதாக பொதுப் பணித் துறை (பி. டபிள்யூ. டி.) வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அதிகாரி ஒருவா் கூறியதாவது: இத்திட்டத்தின் கீழ், நவீன விளக்குகள், அலங்கார தெரு விளக்குகள் ஆகியவற்றை நிறுவவும், தோட்டக்கலை பணிகளில் கவனம் செலுத்தியும், ராஜ்காட் பகுதியில் சாலைகளைப் புதுப்பிக்கும் பணியை பொதுப் பணித் துறை மேற்கொள்ளும்.

தேசிய மற்றும் சா்வதேச முக்கியத்துவம் வாய்ந்த இப்பகுதியின் அழகை மேம்படுத்துவதை இந்த முன்முயற்சி நோக்கமாகக் கொண்டுள்ளது.

மகாத்மா காந்தியின் நினைவிடம் அமைந்துள்ள ராஜ்காட் பகுதியானது, இந்தியாவுக்கு அலுவல்முறை பயணமாக வரும் வெளிநாட்டுப் பிரமுகா்களால் அவ்வப்போது பாா்வையிடப்படுகிறது. இந்த இடமானது, தினசரி ஏராளமான சுற்றுலாப் பயணிகளையும் பாா்வையாளா்களையும் ஈா்த்து வருகிறது.

திட்டத்தின் ஒரு பகுதியாக, தெரு விளக்கு கம்பங்கள், அலங்கார வேலைகளால் ஆன எல். ஈ. டி. விளக்குகள் பொறுத்தப்படும். இவை ஸ்மாா்ட் விளக்குகளாக இருக்கும். தேவைப்படும் இடங்களில் சாலைகளில் பழுதுபாா்க்கும் பணிகளும் நடைபெறும். இது தொடா்பாக ஒப்பந்தப்புள்ளி விடப்பட்டுள்ளன.

ரூ. 96 லட்சம் மதிப்பீட்டில் இரண்டு மாதங்களில் இத்திட்டம் முடிக்கப்பட வேண்டும். நிகழாண்டு ராஜ்காட் பகுதிக்காக அரசாங்கத்தால் தொடங்கப்பட்ட இரண்டாவது திட்டம் இதுவாகும். நிகழ் ஆண்டின் தொடக்கத்தில், இப்பகுதியில் நெரிசலைக் குறைக்க சாந்தி வன் கிராஸிங் மற்றும் ராஜ்காட் கிராஸிங் இடையே சிக்னல் இல்லாத நடைபாதையையும் பொதுப் பணித் துறை திட்டமிட்டது.

ராஜ்காட் மற்றும் சாந்தி வன் பகுதியில் தலைகீழ் திருப்பங்கள் மூலம் ரிங் சாலையை சிக்னல் இல்லாததாக மாற்றுவதை நோக்கமாகக் கொண்ட ஒரு சோதனை உள்கட்டமைப்பு திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.

இரண்டு குறுக்குவெட்டு சாலைகள் நாள் முழுவதும் அதிக போக்குவரத்தைக் காண்கின்றன. இதன் விளைவாக பெரும்பாலும் நீண்ட வாகன வரிசைகள் மற்றும் நெரிசல்கள் காணப்படுகின்றது. சிக்னல்கள் பொறுத்தப்பட்ட குறுக்குவெட்டு சாலைகள் மற்றும் போக்குவரத்து ஓட்டத்திற்கு இடையூறு விளைவிக்கும் திருப்பங்கள் காரணமாக போக்குவரத்து தாமதம் ஏற்படுகிறது.

சுற்றுச் சாலையில் உள்ள பிற நெரிசலான சந்திப்புகளில் இதேபோன்ற தலையீடுகளை பரிசீலிப்பதற்கு முன்பு திட்டத்தின் செயல்திறனை மதிப்பிடுவதற்கு பொதுப் பணித் துறைக்கு இந்த சோதனை உதவும் என்றாா் அந்த அதிகாரி.