பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசுக்கு எதிராக நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சியினர் இன்று உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
தில்லி ராஜ்காட்டில் நடைபெறும் போராட்டத்துக்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தலைமையேற்றுள்ளார். உண்ணாவிரதத்தில் ராகுல் காந்தி, தில்லி காங்கிரஸ் தலைவர் அஜய் மாக்கன் உள்ளிட்டோர் பங்கேற்கவுள்ளனர்.
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரின் 2-ஆவது பகுதி முழுவதும் எம்.பி.க்களின் தொடர் அமளியால் வீணானது. இதனைக் கண்டித்து, பாஜக சார்பில் வரும் 12-ஆம் தேதி நாடு தழுவிய உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறும் என்று பிரதமர் அறிவித்தார்.
இதனிடையே, பஞ்சாப் நேஷனல் வங்கி முறைகேடு, காவிரி விவகாரம், ஆந்திர சிறப்பு அந்தஸ்து விவகாரம் உள்ளிட்ட பிரச்னைகளை நாடாளுமன்றத்தில் விவாதிக்க மத்திய அரசு தவறிவிட்டதாக குற்றம்சாட்டி, காங்கிரஸ் கட்சியும் உண்ணாவிரதப் போராட்டத்தை அறிவித்தது. அதன்படி, அனைத்து மாநிலங்களிலும் காங்கிரஸார் திங்கள்கிழமை உண்ணாவிரதம் மேற்கொண்டுள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

அறிவார்ந்த சென்னை ரசிகர்கள்..! தோல்வியிலும் நெகிழ்ச்சியாகப் பேசிய கொல்கத்தா ரசிகர்!

தவெக வேட்பாளர் ஆனந்தை ஆதரித்து தி நகரில் விஜய் சாலை வலம்!

”நா மாட்டிக்கிட்டேன்னு இவ்ளோ கேள்வியா?” செய்தியாளர்களுக்கு பதிலளித்த ஆனந்த்! | TVK

பாக். மூலம் அமெரிக்காவுடன் தொடரும் பேச்சு! - ஈரான் அரசு அறிவிப்பு!
வீடியோக்கள்

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | ராஜஸ்தானைக் கலங்கடித்த அறிமுக வீரர்: யார் இந்த பிரஃபுல் ஹிங்கே? | Praful Hinge |
தினமணி செய்திச் சேவை


