சென்னையில் பதுக்கி வைத்திருந்த 40 சிலிண்டா்கள் பறிமுதல்!புனேவில் 4 வயது குழந்தையை பாலியல் வன்கொடுமை செய்து கொன்ற முதியவர்!மணிப்பூரில் 23 சட்டவிரோத பதுங்கு குழிகளை அழித்த பாதுகாப்புப் படையினர்!தேர்தல் முடிவுகள் வெளியாகும் நேரத்தில் பேசுபொருளாகும் ஜோதிமணி ட்வீட்!கட்டாய வெற்றிக்கான தேவையுடன் இன்று மோதும் சென்னை - மும்பைஈரான் புதிய சமரசத் திட்டம்: திருப்தியில்லை என டிரம்ப் நிராகரிப்புமேற்கு வங்கத்தின் 15 வாக்குச்சாவடிகளில் இன்று மறு வாக்குப் பதிவு
/

தில்லியில் நாளை மத்திய பொதுத்துறை நிறுவனங்களின் மாநாடு: பிரதமர் மோடி பங்கேற்பு

மத்திய பொதுத்துறை நிறுவனங்களின் மாநாடு புதுதில்லியில் உள்ள விஞ்ஞான் பவனில் நாளை நடைபெற உள்ளது.

News image
Updated On :9 ஏப்ரல் 2018, 12:43 pm

மத்திய பொதுத்துறை நிறுவனங்களின் மாநாடு புதுதில்லியில் உள்ள விஞ்ஞான் பவனில் நாளை நடைபெற உள்ளது. 

இம்மாநாட்டில் மத்திய பொதுத்துறை நிறுவனங்களின் மூத்த அதிகாரிகளும், அமைச்சகத்தின் உயர்நிலை அலுவலர்களும் பங்கேற்க உள்ளனர். மத்தியப் பொதுத் துறை நிறுவனங்களின் சிறந்த நடைமுறைகள் குறித்தும் எதிர்காலத் திட்டங்கள் குறித்தும் விவாதிக்கப்பட உள்ளது. மத்திய பொதுத்துறை நிறுவனங்களின் (சி.பி.எஸ்.இ) மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்க உள்ளார். 

பெருநிறுவன நிர்வாகம், மனிதவள நிர்வாகம், நிதிநிலைச் சீரமைப்பு, புதிய கண்டுபிடிப்பு போன்ற விஷயங்களில் கருத்து நிலை அறிக்கைகள் பிற்பகலில் பிரதமருக்கு வழங்கப்பட உள்ளது. . இதைத் தொடர்ந்து மாநாட்டில் பிரதமர் உரையாற்றுவார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.