சிலிண்டர் விலையால் விடுதி கட்டணங்களும் அதிரடி உயர்வுநாடாளுமன்றத்தின் பொதுக் கணக்குக் குழுவின் தலைவராக கே.சி. வேணுகோபால்!தனித்த ஆளாக ஆட்சியைக் கைப்பற்றும் வலிமையை விஜய் பெறவில்லை: திருமாவளவன்சென்னையில் பதுக்கி வைத்திருந்த 40 சிலிண்டா்கள் பறிமுதல்!புனேவில் 4 வயது குழந்தையை பாலியல் வன்கொடுமை செய்து கொன்ற முதியவர்!மணிப்பூரில் 23 சட்டவிரோத பதுங்கு குழிகளை அழித்த பாதுகாப்புப் படையினர்!தேர்தல் முடிவுகள் வெளியாகும் நேரத்தில் பேசுபொருளாகும் ஜோதிமணி ட்வீட்!கட்டாய வெற்றிக்கான தேவையுடன் இன்று மோதும் சென்னை - மும்பைஈரான் புதிய சமரசத் திட்டம்: திருப்தியில்லை என டிரம்ப் நிராகரிப்புமேற்கு வங்கத்தின் 15 வாக்குச்சாவடிகளில் இன்று மறு வாக்குப் பதிவு
/

கிரிக்கெட்டின் வளர்ச்சியை விட வணிகத்துக்கு முக்கியத்துவம் அளிக்கும் ஐபிஎல்: முத்தையா முரளிதரன்

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் பயிற்சியாளர் முரளிதரனின் சர்ச்சையான பேட்டி குறித்து...

News image

முத்தையா முரளிதரன். - படம்: ஐபிஎல், பிசிசிஐ.

Updated On :2 மே 2026, 9:35 am

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி பந்துவீச்சு பயிற்சியாளர் முத்தையா முரளிதரன் செய்தியாளர் சந்திப்பில், ”ஐபிஎல் என்பது கிரிக்கெட்டை வளர்ப்பதை விட வணிகத்துக்கு முக்கியத்துவம் அளிப்பதாக இருக்கிறது” எனக் கூறினார்.

முரளிதரனின் இந்தப் பேச்சு பேசுபொருளாகியுள்ளது. நடப்பு ஐபிஎல் தொடரில் 40 போட்டிகளில் 31 முறை 200+ ரன்கள் வருவதால் இவருடைய விமர்சனம் சமூக வலைதளத்தில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

மும்பை இந்தியன்ஸுக்கு எதிரான ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 18.4 ஓவர்களில் 249/4 ரன்கள் எடுத்து அசத்தல் வெற்றி பெற்றது. இந்த வெற்றியுடன் சன்ரைசர்ஸ் புள்ளிப் பட்டியலில் மூன்றாவது இடத்தில் இருக்கிறது.

முன்னதாக, பஞ்சாப் கிங்ஸ் அணி 265 ரன்களை தில்லிக்கு எதிராக 6 பந்துகள் மீதமிருக்க சேஸ் செய்து வரலாறு படைத்தது. இந்த நிலையில், செய்தியாளர் சந்திப்பில் சன்ரைசர்ஸ் அணியின் சுழல்பந்து பயிற்சியாளர் முத்தையா முரளிதரன் பேசியிருப்பதாவது:

சூர்யவன்ஷி ஆகாயத்துக்கு அடிக்கிறார். சிறிய ஆடுகளம் பிரச்னை இல்லை; ஆனால், ஆடுகளம் மிகவும் தட்டையாக இருப்பதாலேயே அதிக ரன்கள் குவிக்கிறார்கள். நடுநிலையான ஆடுகளத்தைக் கொடுத்தால் பார்வையாளர்களே சலிப்படைவார்கள்.

டி20 கிரிக்கெட் ரசிகர்கள் என்டர்டெயின்மென்ட்டை விரும்புகிறார்கள். அதனால், அவர்கள் பவுண்டரிகள், சிக்ஸர்கள் பார்க்க மட்டுமே விரும்புகிறார்கள். அதனால்தான், இந்தத் தொடரே அப்படியாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இம்பாக்ட் விதியினால் கூடுதல் பேட்டர்கள் வருகிறார்கள்.

ஐபிஎல் தொடரால் கிரிக்கெட் வளர்ச்சியடையாது. இது ஒரு என்டர்டெயின்மென்ட். தற்போதைக்கு இது மிகப்பெரிய வணிகமாகவே இருக்கிறது. போட்டி சலிப்பாக சென்றால் விளம்பரதாரர்கள், பார்வையாளர்களை நீங்கள் இழக்கக் கூடும்.

அதிரடியான ஆட்டத்தை நாங்கள்தான் முதலில் ஆடினோம் கடந்த சீசனில். தற்போது அனைவரும் முயற்சிக்கிறார்கள். சவலான ஆடுகளத்தில் பந்துவீச்சாளர்கள் தகவமைத்து பந்துவீச வேண்டும். இதற்கு கூடுதலாக இரண்டு மூன்று ஆண்டுகள் ஆகலாம் என்றார். ஆரஞ்ச் கேப், பர்ப்பிள் இரண்டிலுமே சன்ரைசர்ஸ் அணியின் வீரர்கள் டாப்3ல் இருக்கிறார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Summary

The IPL prioritizes commerce over the growth of cricket: Muttiah Muralitharan

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.