ஆஸ்கர் விருது விழா கோலாகலம்! தென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புவெனிசுலா: 7 ஆண்டுகளுக்குப் பின் அமெரிக்க தூதரகம் மீண்டும் திறப்புயாருடன் கூட்டணி? : இன்று அறிவிக்கிறார் ராமதாஸ்11 மாநிலங்களவை இடங்களுக்கு இன்று தோ்தல்குழாய் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு சிலிண்டர் கிடையாது: மத்திய அரசு
/

காவிரி விவகாரத்தில் காங்கிரஸ் இரட்டை வேடம் போடுகிறது: அமைச்சர் கடம்பூர் ராஜூ குற்றச்சாட்டு

காவிரி மேலாண்மை விவகாரத்தில் காங்கிரஸ் இரட்டை வேடம் போடுவதாக தமிழக செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ

News image
Updated On :30 ஏப்ரல் 2018, 7:21 am

DIN

தூத்துக்குடி: காவிரி மேலாண்மை விவகாரத்தில் காங்கிரஸ் இரட்டை வேடம் போடுவதாக தமிழக செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ குற்றம் சாட்டினார்.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் அமைச்சர் கடம்பூர் ராஜூ செய்தியாளர்களிடம் பேசுகையில், ஸ்டெர்லைட் ஆலை விவகாரத்தில் மக்களின் உணர்வுகளை புரிந்து தமிழக அரசு மாசுகட்டுப்பாட்டு வாரியம் மூலம் ஆலையின் உரிமத்தினை புதுப்பிக்காமல் ரத்து செய்துள்ளது. 

காவிரி விவகாரத்தில் தமிழக அரசின் தொடர் முயற்சியால்தான் உச்ச நீதிமன்றத்தின் உத்தரவு தமிழகத்துக்கு சாதகமாக கிடைத்தது. ஆனால், காவிரி மேலாண்மை விவகாரத்தில் காங்கிரஸ் கட்சி இரட்டை வேடம் போடுகிறது என்றும், காவிரிமேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்ற தீர்ப்பினை காங்கிரஸ் மதிக்கவில்லை என கடம்பூர் ராஜூ குற்றம் சாட்டினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.