காவிரி விவகாரத்தில் காங்கிரஸ் இரட்டை வேடம் போடுகிறது: அமைச்சர் கடம்பூர் ராஜூ குற்றச்சாட்டு

காவிரி மேலாண்மை விவகாரத்தில் காங்கிரஸ் இரட்டை வேடம் போடுவதாக தமிழக செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ
காவிரி விவகாரத்தில் காங்கிரஸ் இரட்டை வேடம் போடுகிறது: அமைச்சர் கடம்பூர் ராஜூ குற்றச்சாட்டு
Updated on
1 min read

தூத்துக்குடி: காவிரி மேலாண்மை விவகாரத்தில் காங்கிரஸ் இரட்டை வேடம் போடுவதாக தமிழக செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ குற்றம் சாட்டினார்.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் அமைச்சர் கடம்பூர் ராஜூ செய்தியாளர்களிடம் பேசுகையில், ஸ்டெர்லைட் ஆலை விவகாரத்தில் மக்களின் உணர்வுகளை புரிந்து தமிழக அரசு மாசுகட்டுப்பாட்டு வாரியம் மூலம் ஆலையின் உரிமத்தினை புதுப்பிக்காமல் ரத்து செய்துள்ளது. 

காவிரி விவகாரத்தில் தமிழக அரசின் தொடர் முயற்சியால்தான் உச்ச நீதிமன்றத்தின் உத்தரவு தமிழகத்துக்கு சாதகமாக கிடைத்தது. ஆனால், காவிரி மேலாண்மை விவகாரத்தில் காங்கிரஸ் கட்சி இரட்டை வேடம் போடுகிறது என்றும், காவிரிமேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்ற தீர்ப்பினை காங்கிரஸ் மதிக்கவில்லை என கடம்பூர் ராஜூ குற்றம் சாட்டினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com