ஜம்மு காஷ்மீரில்  பயங்கரவாதிகளுக்கு இடையே துப்பாக்கிச் சூடு: 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை

ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகளுக்கும், பாதுகாப்பு படையினருக்கும் இடையே நடைபெற்ற துப்பாக்கிச்சூட்டில் பயங்கரவாதிகள் 2
ஜம்மு காஷ்மீரில்  பயங்கரவாதிகளுக்கு இடையே துப்பாக்கிச் சூடு: 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை
Published on
Updated on
1 min read

    
சோப்போர்:
ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகளுக்கும், பாதுகாப்பு படையினருக்கும் இடையே நடைபெற்ற துப்பாக்கிச்சூட்டில் பயங்கரவாதிகள் 2 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். 

ஐம்மு காஷ்மீர் மாநிலம் சோப்போர் மாவட்டம் துருசு கிராமத்தில் பாதுகாப்பு படையினரை இருப்பிடத்தை குறிவைத்து பயங்கரவாதிகள் நள்ளிரவு துப்பாக்கிச்சூடு நடத்தினர். 

அவர்களுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக பாதுகாப்பு படையினரும் பதில் தாக்குதல் நடத்தினர். சுமார் 4 மணிநேரமாக நடந்து வந்த இந்த தாக்குதலில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டதாக பாதுகாப்பு படை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தேடுதல் வேட்டையும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. 

குப்வாரா மாவட்டத்தில் நேற்று வியாழக்கிழமை பாதுகாப்பு படையினருடன் நடந்த மோததில் இரு பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com