ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீர் மாநிலம் பாராமுல்லா அருகே வனத்துறை அதிகாரி ஒருவர் பயங்கரவாதிகளால் துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டார்.
ஜம்மு காஷ்மீர் மாநிலம் பாரமுல்லா மாவட்டத்தில் வசித்து வரும் வனத்துறை அதிகாரி பயங்கரவாதிகளால் சுட்டுக்கொல்லப்பட்டார். உடலில் குண்டுகள் பாய்ந்து உயிரிழந்த வனத்துறை அதிகாரி தாரிக் அகமத் மாலிக் (38) என போலீஸாரால் அடையாளம் காணப்பட்டது. வனத்துறை அதிகாரி கொலை செய்யப்பட்டது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
வழக்கின் முதல்கட்ட விசாரணையில் லஷ்கர்-இ-தொய்பா அமைப்பைச் சேர்ந்த பயங்கரவாதி யூசுஃப் தார் காண்ட்ரூ இந்த கொலை வழக்கில் ஈடுபட்டிருப்பது போலீஸாருக்கு தெரிய வந்துள்ளது.
கடந்த சில நாட்களாக ஜம்முவில் பயங்கரவாதிகள் போலீஸ் அதிகாரிகளை கொலை செய்து வரும் சம்பவம் அதிகரித்து வருகிறது. கடந்த புதன்கிழமை பக்ரீத் பண்டிகை கொண்டாடுவதற்காக சொந்த ஊர் வந்திருந்த பயாஸ் அகமது ஷா என்னும் போலீஸ் அதிகாரி பயங்கரவாத இயக்கத்தின் ஹிஸ்புல் முஜாஹிதீன் பயங்கரவாதிகளால் சுட்டுக்கொல்லப்பட்டார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

எஸ்.எஸ்.பாலாஜி, ஆளுர் ஷாநவாஸ் ஆகியோருக்கு விசிக-வில் முக்கியப் பொறுப்பு!

பரமத்தி வேலூா் ஏலச் சந்தையில் பூக்களின் விலை உயா்வு

நீட் தோ்வு: நாமக்கல் மாவட்டத்தில் 4,741 போ் எழுதுகின்றனா்

திருச்செங்கோடு வாக்கு எண்ணிக்கை மையத்தில் மூன்று அடுக்கு போலீஸ் பாதுகாப்பு: ஆட்சியா்
வீடியோக்கள்

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை

வெள்ளை அறிக்கை வேண்டும்! சிசிடிவி காட்சியை வெளியிட்ட செல்வப்பெருந்தகை! | IT RAID | Congress
இணையதளச் செய்திப் பிரிவு

வரலாறு காணாத வாக்குப்பதிவா? | N Gopalaswami Interview | TN Election 2026 | Vote percentage in tamil nadu
தினமணி செய்திச் சேவை

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை


