சென்னை: சென்னை விமானநிலையத்தில் கொழும்பு செல்வதற்காக வந்த 2 பயணிகளிடம் இருந்து ரூ.8 லட்சம் மதிப்பிலான வெளிநாட்டு பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
சுங்கத்துறை அதிகாரிகளுக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில், கொழும்பு செல்வதற்காக வந்த சென்னை விமானநிலையம் வந்த பயணிகளிடம் சோதனை நடத்தப்பட்டது. இதில், சிக்கந்தர், சாகுல் ஹமீது ஆகிய 2 பேரிடம் நடத்திய சோதனையில் அவர்களிடம் இருந்த ரூ.8 லட்சம் மதிப்பிலான அமெரிக்க டாலர்கள் கைப்பற்றப்பட்டுள்ளது.
இது குறித்து அவர்களிடம் சுங்கத்துறை அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.