எண்ணெய்க் கப்பல்களுக்குப் பாதுகாப்பு அளிக்க நாங்கள் தயார்நிலையில் இல்லை! - அமெரிக்கா!அமெரிக்கா மீதான தாக்குதல் தொடரும்! மொஜ்தபா கமேனி முதல் உரையில் எச்சரிக்கை!ஈரான் போர்: சொந்த நாட்டினுள் இடம்பெயர்ந்த 32 லட்சம் மக்கள்!பங்குச்சந்தை: ஆட்டோ பங்குகள் கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 829, நிஃப்டி 228 புள்ளிகள் சரிவு!ஓபிசி பிரிவினருக்கான கிரீமி லேயர் தகுதி: உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முதல்வர் ஸ்டாலின் ஆதரவு!சட்டம்-ஒழுங்கு சீர்கேடு: திமுக அரசைக் கண்டித்து தே.ஜ.கூ. ஆர்ப்பாட்டம்!தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!
/

மீனாட்சி அம்மன் கோவில் தீ விபத்தால் குழந்தைகளுக்கு ஆபத்தா..? பரவும் வதந்தி.. பயத்தில் மக்கள்!

உலகப் புகழ் பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் தீ விபத்து ஏற்பட்டதையடுத்து, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் கிரகணம் நடந்தது

News image
Updated On :5 பிப்ரவரி 2018, 3:58 am

DIN

உலகப் புகழ் பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் தீ விபத்து ஏற்பட்டதையடுத்து, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் கிரகணம் நடந்தது முதலே எதுவும் சரியில்லை என்றும் குழந்தைகளுக்கு ஆபத்து என்று பரவி வரும் வதந்தியால் மக்கள் பயத்தில் உள்ளனர்.

மீனாட்சி அம்மன் கோவில் வளாகத்தில் கடந்த 2-ஆம் தேதி இரவு கிழக்கு கோபுர வளாகத்தில் உள்ள 35க்கும் மேற்பட்ட கடைகள் தீ விபத்து ஏற்பட்டது.  அதையடுத்து சம்பவ இடத்திற்கு 5 தீயணைப்பு வாகனங்களுடன் விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் சுமார் மூன்று மணி நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். 

இதனிடையே மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் ஏற்பட்ட தீ விபத்து சம்பவம், விபத்தா அல்லது சதியா என பாஜக தேசிய செய்தித்தொடர்பாளர் எச்.ராஜா நேற்று கேள்வி எழுப்பியிருந்தார். 

இந்நிலையில், திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் கிரகணம் நடந்தது முதலே எதுவும் சரியில்லை என்றும் தற்போது மீனாட்சி அம்மன் கோவிலில் ஏற்பட்ட தீ விபத்தால், குழந்தைகளுக்கு ஆபத்து என்று வதந்தி பரவுகிறது.

இத்ததைகய பாதிப்புகளில் இருந்து பாதுகாப்பாக இருக்குவேண்டுமானால், பெண் குழந்தைகள் வைத்திருப்பவர்கள் 9 ஆண்களிடம் தலா ரூ.1 வீதம் 9 பேரிடம் ரூ.9 தர்மம் வாங்கி, அந்த ரூபாயில் வளையல் வாங்கி அம்மன் கோவிலுக்கு சென்று வளையல் போட வேண்டும் என்றும் ஆண் குழந்தைகள் வைத்திருப்பவர் குழந்தைகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப ஏற்ப வீட்டு வாசலில் வெற்றிலை அல்லது வாழை இலையில் பச்சை அரிசி வைத்து விளக்குகள் ஏற்ற வேண்டும் என்று யாரோ வதந்தியை கிளப்பிவிட அது தீயாக பரவி வருகிறது. 

இந்த வதந்தியை நம்பி காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களில் மக்கள் வீட்டு வாசலில் விளக்கு வைத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.