சீனாவில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.3 ஆக பதிவு
சீனா தலைநகர் பெய்ஜிங்கில் இன்று நிலநடுக்கம் ஏற்பட்டது.


சீனா தலைநகர் பெய்ஜிங்கில் இன்று நிலநடுக்கம் ஏற்பட்டது.
பெய்ஜிங் வட பகுதியின் ஹேபேய் மாகாணத்தில் உள்ள லங்பாங் நகரை மையமாக கொண்டு இன்று பிற்பகல் மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது.
ரிக்டர் அளவில் 4.3 அலகுகளாக பதிவான இந்த நிலநடுக்கத்தின் எதிரொலியாக தலைநகர் பீஜிங்கில் உள்ள கட்டிடங்கள் குலுங்கியதாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இன்றைய நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்பு மற்றும் இழப்புகள் தொடர்பான உடனடி தகவல் ஏதும் வெளியாகவில்லை.
சீனாவின் வடபகுதியில் அவ்வப்போது பலத்த மற்றும் மிதமான நிலநடுக்கங்கள் ஏற்பட்டு வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...