6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

ஒடிசாவில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாம்புகளைப் பிடித்த இளைஞர்!

ஒடிசா மாநிலம் மயூர்பஞ்ச் மாவட்டத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் இதுவரை 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாம்புகளைப் பிடித்துள்ளதுடன்

News image
Updated On :14 ஜனவரி 2018, 11:06 am

DIN

மயூர்பஞ்ச்: ஒடிசா மாநிலம் மயூர்பஞ்ச் மாவட்டத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் இதுவரை 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாம்புகளைப் பிடித்துள்ளதுடன் காயமடையும் காட்டு விலங்குகளான யானைகள், புலிகள், குரங்குகள் போன்றவைகளுக்கும் சிகிச்சை அளித்து வருகிறார்.

ஒடிசா மாநிலத்தின் மயூர்பஞ்ச் மாவட்டத்தில் உத்தாணி நுவாகான் என்கிற ஊரைச் சேர்ந்த கிருஷ்ண சந்திர கோச்சாயத் என்கிற இளைஞர் பாம்புகளைக் கண்டு அஞ்சுவதில்லை. எத்தகைய கொடிய நஞ்சுள்ள நாகமாக இருந்தாலும் வெறுங்கையால் அவற்றைப் பிடித்து விடுகிறார். சுற்று வட்டாரத்தில் எந்த வீட்டில் பாம்பு புகுந்தாலும் அதைப் பிடிக்க இவரையே அழைக்கின்றனர்.

இவர், பாம்பு மட்டுமல்லாமல் அனைத்து உயிர்கள் மீதும் அன்பு காட்டுபவராக உள்ளார். காடுகளில் காயம்பட்டுத் துன்புறும் விலங்குகளைக் கண்டால் அவற்றுக்கும் மருந்திட்டுச் சிகிச்சை அளித்து வருகிறார். 

மான், புலி, யானை, சிறுத்தை, குரங்கு ஆகிய விலங்குகளுக்கும் பறவைகளுக்கும் சிகிச்சை அளித்து அவற்றைக் காப்பாற்றுவதுடன் அதனை மீண்டும் காட்டில் விடுப்பது தனக்கு மனநிறைவைத் தருவதாக அவர் தெரிவிக்கிறார். 

தோல்கள் மற்றும் விலங்குகளின் பிற பாகங்களை விற்க விரும்பும் வேட்டைக்காரர்களிடமிருந்து அனைத்து வகையான விலங்குகளையும் காப்பாற்றி வனத்துறையை உதவி வருகிறார். 

விலங்குகள் இல்லையேல் காடுகள் இல்லை, காடுகள் இல்லையேல் மனிதனே இல்லை என்கிறார் கிருஷ்ணச் சந்திர கோச்சாயத்

வன பாதுகாப்பின் உதவியோடு மட்டுமல்லாமல் பல நேரங்களிலும் தனது சொந்த செலவில் மீட்கவும் சாலையோர நாய்கள் அமைப்பையும் நடத்தி வருகிறார். 

உத்தாணி நுவாகான் கிராமத்தில் குடும்பத்தாரோடு வாழ்ந்து வருகிறார் கோச்சாயத். அவருடைய மனைவி மற்றும் தாயார் அவருடைய வாழ்க்கையை நினைத்து எப்போதும் பயப்படுவதாக கூறுகிறார்கள். 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.