மகளிர் இடஒதுக்கீட்டுக்கு ஆதரவு; தொகுதி மறுவரையறைக்கு எதிர்ப்பு! - ராகுல்தொகுதி மறுசீரமைப்புக்கு எதிர்ப்பு: தனிப்பட்ட இயக்கத்தின் போராட்டம் அல்ல; தமிழ்நாட்டின் போராட்டம் - மு.க. ஸ்டாலின்பாக். மூலம் அமெரிக்காவுடன் தொடரும் பேச்சு! - ஈரான் அரசு அறிவிப்பு!அதிமுக அரசின் ஏதாவது ஒரு சாதனையைக் கூறி பழனிசாமியால் ஓட்டு கேட்க முடியுமா? மு.க. ஸ்டாலின்தேர்தல் முக்கியமல்ல, சுயமரியாதையே முக்கியம் : மு.க. ஸ்டாலின் உ.பி.யில் 17 வயது சிறுமிக்கு கூட்டுப் பாலியல் வன்கொடுமை! தூக்கிட்டுத் தற்கொலை!சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு முடிவுகள் வெளியீடுமீஞ்சூரில் மாணவியிடம் பாலியல் அத்துமீறல்! அரிவாளால் வெட்டிய இளைஞர்கள்! திமுக தோற்க வேண்டும் என ராகுல் நினைக்கிறார்: அண்ணாமலை பேச்சுதொகுதி மறுவரையறை! தமிழ்நாட்டில் நாளை கருப்புக் கொடிப் போராட்டம்! - மு.க. ஸ்டாலின் அறிவிப்பு
/

இந்தியப் பொருளாதாரம் தவறான திசையில் செல்கிறது: பொருளாதார வல்லுநர் அமர்த்தியா சென்

இந்தியப் பொருளாதாரம் தவறான திசையை நோக்கிச் சென்றுகொண்டிருப்பதாக நோபல் பரிசு பெற்ற பொருளாதார வல்லுநரும்

News image
Updated On :9 ஜூலை 2018, 10:33 am


புதுதில்லி: இந்தியப் பொருளாதாரம் தவறான திசையை நோக்கிச் சென்றுகொண்டிருப்பதாக நோபல் பரிசு பெற்ற பொருளாதார வல்லுநரும் எழுத்தாளருமான அமர்த்தியா சென் தெரிவித்துள்ளார்.

தில்லியில் நூல் வெளியீட்டு விழாவில் அமர்த்தியா சென் பேசுகையில், இந்தியாவில் பொருளாதாரம் விரைவாக வளர்ச்சியடைந்ததாக இருந்த போதிலும், 2014-ஆம் ஆண்டில் தேசிய ஜனநாயக கூட்டணி அதிகாரத்திற்கு வந்ததில் இருந்து அது தவறான திசையை நோக்கிச் சென்றுகொண்டிருப்பதாகக் குறிப்பிட்டார்.

இருபதாண்டுகளுக்கு முன் தெற்காசிய மண்டலத்தில் பொருளாதரத்தில் பாகிஸ்தான், வங்காளம், நேபாளம் மற்றும் பூட்டான், இலங்கைக்கு அடுத்து இரண்டாவது சிறந்த நாடாக விளங்கிய இந்தியா, இப்போது மோசமான நாடுகள் பட்டியலில் பாகிஸ்தானுக்கு அடுத்து இரண்டாவதாக உள்ளதாக அமர்த்தியா சென் தெரிவித்தார்.

சமூகத்தின் ஒரு பிரிவினர் அடுத்த வேளை உணவுக்கான உறுதி இல்லாமலும், நலவாழ்வு, கல்வி ஆகியவை இல்லாமலும் வாழ்ந்து வருவதாக அமர்த்தியா சென் தெரிவித்தார். தலித்துகளுக்கு எதிராக அதிகரித்துவரும் வன்முறை சுட்டிக்காட்டியவர், இதற்கு உதரணமாக சமீபத்தில் மத்தியப்பிரதேசத்தில் பெட்ரோல் பங்க் ஊழியரை தூணில் கட்டி வைத்து உரிமையாளரே தாக்கிய சம்பவத்தை குறிப்பிட்டவர், சாதி அமைப்பு மற்றும் சமூகத்தின் ஒரு பிரிவினரிடையே இருந்து சமத்துவமின்மையை கண்டுகொள்ளாமல் அரசு ஒதுங்கியிருப்பதாக பொருளாதார வல்லுநர் அமர்த்தியா சென் கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.