கேரளாவில் காரும் ஆந்திர பேருந்தும் மோதி விபத்து: 6 பேர் பலி

கேரள மாநிலம், கோட்டயம் மாவட்டம் பெரும்பாவூர் அருகே காரும் ஆந்திரா மாநில பேருந்தும் மோதி விபத்துக்குள்ளானதில் காரில் இருந்த 6 பேர்
கேரளாவில் காரும் ஆந்திர பேருந்தும் மோதி விபத்து: 6 பேர் பலி
Updated on
1 min read

கோட்டயம்: கேரள மாநிலம், கோட்டயம் மாவட்டம் பெரும்பாவூர் அருகே காரும் ஆந்திரா மாநில பேருந்தும் மோதி விபத்துக்குள்ளானதில் காரில் இருந்த 6 பேர் பலி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

ஆந்தாரவில் இருந்து சபரிமலைக்கு பக்தர்களை ஏற்றிக்கொண்டு வந்த பேருந்து, கேரள மாநிலம், கோட்டயம் மாவட்டம் பெரும்பாவூர் அருகே அதிகாலை 3 மணியளவில் எதிரே வந்துகொண்டிருந்த காரின் மீது விபத்துக்குள்ளானது. 

இதில், காரில் இருந்த ஜெனிஷ், விஜயன், கிரண், உன்னி, ஜெரின், ஜெனிஷ் உள்ளிட்ட 6 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். ஒருவர் காயமடைந்தார். 

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீஸார் காயமடைந்தவரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

விபத்து குறித்து போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com